October 25, 2016

தாகம்

தாகம் என்று
நீ வந்தால்
உன் தாரமாக
நானும் இருப்பேன்
என் தாய்மையும்
நானும் மறப்பேன்
பிள்ளைகள் வந்த
பாதையில்
உன் காமம்
நிர்வாணமாய்
நுழையும் போது
கண்களை போல
வாழ்வின் சில
ஜன்னல்கள் மூடட்டும்,
இது தான் வாழ்க்கை
என்றால்
வருத்தமும்
கண்ணீரும் வந்து
ஒன்றும் ஆக போவதில்லை,

பசிகள் தீர்க்க
கடவுள் இல்லை
(கடவுள் இல்லா உலகம்)
என்று நினைத்துவிடாதே,
கடவுளால் படைக்கப்பட்ட
நானும் ஒரு
கடவுள் தான்
நானே தீர்க்கிறேன்
உனது பசியை..

துயர் நிறைந்த போதும்
தூய்மையான
மனம் நிறைந்த அறையில்
அல்லி மலர் போல
நானும் காத்திருப்பேன்
அனைத்து உறங்கும்
வேலையில்
அனைவரும் உறங்க...

உம்மியிட்ட நெருப்பாய்
உனது நெருக்கம்
எனது விருப்பம்
விடியும் வரை
அனையாமல்
நானும் எரிவேன்
உனக்கு ஏதுவாக
உன் ஆசைகள்
தீரும் வரை
காமத்தின் திரியை
தூண்டி தூண்டி
துடிக்கின்ற
மீனிற்கு
துளியளவு நீர் போல
வேர்வைகளை உனக்களித்து,
வேதனைகளை
வேர் அறுத்து,
வெளிச்சத்தின் பாதையில்
காமத்தின் இருளை அகற்றி
இன்னும் இன்னுமாய்
உனக்கு இன்பமளித்து
இறுதியில் இறைவனை
காண்பேன்...

-SunMuga-
24-10-2016 23:45 PM

October 24, 2016

ஆசை

எத்தனை கோடி
ஆசைகள்,
எத்தனை ஆயிரம்
கனவுகள்,
அத்தனையும் மீறி
முதல் ஆசையாய்,
முதல் கனவாய்,
பிறக்கிறது
ஒரு முறையேனும்
இறந்து விட வேண்டும்
இந்த இரவிலே இன்று...

-SunMuga-
24-10-2016 22:20 PM