January 8, 2017

கண்ணீர்

கண்ணீர் தருவித்த
கவிதை ஒன்றில்
காலத்தின் ஏக்கங்கள்
தாகமாக நிறைந்துள்ளது,
தண்ணீராக
எதை பருகுவது?
காலத்தின் கவிதையவா?
இல்லை
கவிதையில் கரைந்த
காலத்தையா?
இவை இரண்டையுமே
கடவுள் தந்த போது தான்
குழப்பம்...

-SunMuga-
08-01-2017 21:50 PM