காலைச் சூரியன் கண்
திறந்து பார்க்கிறான்;
சந்தோஷமாக பலர்
பாதங்கள் நடை போட
ஆரம்பிக்கிறது;
தலை குனிந்து வணக்கம்
சொல்லும் வாழை மரம்;
செவ்விதழ் ரோஜாவும்,
மனம் மயக்கும் சந்தனமும்,
அதற்கு அழகு சேர்க்கும்
குங்குமமும்,
சிறு துளி பன்னீர் மழை
தூவும் குவளையும்,
காதுக்கு இனிமை சேர்க்கும்
மத்தளமும் முழங்க;
அரங்கம் முழுதும் மூத்தோர்,
பெற்றோர், இளையோர்,
தோழர்கள், தோழிகள்
மற்றும் வாழ்த்த வயதில்லை
என்று தன் பெற்றோரை விட
அழகா! என்று மெய் மறந்து
தன் அம்மாவின் மடியில்
அமர்ந்திருந்த மழலைச்
செல்வமும்,
எங்கள் திருமணத்தின் போது..
அவளின் வளையல் ஒளி
ஒளிரும் ஒளியை மிஞ்சும்,
அவள் கொலுசின் ஒலி
மத்தள ஒலியை தோற்கடிக்கும்;
வண்ண மீன் போன்ற
தன் கண்களுக்கு
கரு மையினால்
வலை போட்டு;
கண்ணிலே ஜடை செய்து
ஒரு வித நமட்டுச் சிரிப்புடன்
மணமேடையில் என் அருகே
வந்து அமர்ந்தாள் என்னவள்;
வாழ்த்துக்கள் தூவ
கட்டினேன் மூன்று முடுச்சு;
அன்பில் என் அன்னையாக
என்றும் நீ இருக்க வேண்டும்
என்று முதல் முடுச்சு;
பாசத்தில் உன் தந்தையாக
என்றும் நான் இருப்பேன்
என்று இரண்டாவது முடுச்சு;
உன் குழந்தையாக என்றும்
உன் மடியில் தவழ வேண்டும்
என்று மூன்றாவது முடுச்சு;
மலிந்த ஒளியில் புரட்டி
படித்தேன் - என் கவிதையை
ஆஹா! என்ன அழகு,
படித்ததும், படிக்காததும்;
என் கவிதையில்
மச்சம் என்னும் கரும் புள்ளியோ,
மேற்குறியீடாக தோன்றுகிறது,
மற்றொரு மேற்குறியீடு எங்கே
என்று தேடித் தேடி படிக்கிறேன்..
வார்த்தை வரிகளை விட
என் கை ரேகையே அதிகம்
தென்படுகிறது- என் கவிதையில்
நான் கொஞ்சம் தொட்டுப்
படித்ததால் என்னவோ!!
காற்புள்ளிக்கோ வெகுமதி
என் கவிதையில்,
கிடையாத ஒன்றை கிடைக்கும்
என்ற அரை மனதில்
தேடிப் பார்க்கிறேன்
முற்றும் முற்றுப் பெறாத
முற்றுப் புள்ளியை;
என் கவிதையின் ஒரு
கேள்வி; நமக்கு ஓர்
உயிர் உருவானால்
என்னை எப்படி
கவனிப்பாய் என்று?
என் குழந்தைக்கும்
குழந்தையாம்!!
உன் விளையாட்டு
பொருளாகவே மாறி விட
ஆசையடி;
மயங்கும் மாலைப் பொழுதில்
குழந்தை போல,
உன் விரல் பிடித்து
நடப்பேன் என்றேன்;
மறுகனம் அவளோ கால்
வலித்தால் என்றால்?
என் கண்ணீரை காய்ச்சி
ஒத்தனம் கொடுப்பேன்
என்றேன்;
அவளும் சொல்கிறாள்
I Lv U என்று கண்ணீரோடு ;
நீ குனிந்து உன்
உடை மாற்ற விட மாட்டேன்;
உன் உடையையும் நானே
துவைப்பேன்;
சமைப்பது உன் விரலாக
இருந்தாலும், ஒரு சில
வேலைகளை சமாளிப்பது
என் விரலாக இருக்கும்..
வீட்டை நீ துடைத்தாலும்
என் மனம் விட்டுக் கொடுக்காது;
நீ தூங்கும் போது
நீ திரும்பிய பக்கமெல்லாம்
நான் இருப்பேன் உன் கை
என் மேல் படவே;
நம் இரு உயிரும்
கண்ணீர் விடுகிறது நம்
உயிரின் பாதம் கழுவுவதற்காக..
உன் விழி போல்
அவன் விழி,
விழியின் கருவிழி போல் மேனி,
பிறந்தான் நம் மகன்...
வலியில் நீ துடித்தாலும்
நம் மகனின் விழியை
பார்த்து சிரிக்கிறாயே
என் உயிரே!
என் விரலில் முத்தமிட்டபடி;
-SunMuga-