November 6, 2014

பிறை நிலா

நிலவே!
உன் முகம் பார்த்தே
பல இரவை கடந்து விட்டேன்
இப்போது காத்திருக்கிறேன்
நான் இறப்பதற்கு!!!
பகல் பொழுதில் கூட
இந்த சூரியன் தேடும்
நிலவு நீ!!
நீ இல்லமால் ஒரு
நாளும் நான் ரசித்தது இல்லை
அந்த நிலவை!!
நிலவே!!
இரவில்
கரையில் அமரும்போதெல்லாம் உன் கரம் தேவைப்படுகிறது..
இரவில் பொங்கி எழும்
அலைகள் கடலின் உள்ளே
அடங்குவது போல
உன் மீதான ஆசைகளும்
என்னுள்ளே அடங்கிவிடுகிறது..
நிலவொளியில்
கடல் காற்றை விட
உன் மூச்சுக் காற்றே
என்னை முத்தமிட வைக்கிறது..
நிலவொளியில்
நீ அமர்ந்து ஆடிய
ஊஞ்சல் என்னவோ
இன்னும் ஆடிக் கொண்டே
இருக்கிறது என் கண்களில்..
உன் கன்னத்தோடு
என் கன்னம்
சேர்த்து ஒரு நாளவது
நான் கான வேண்டும்
அந்த நிலவை!!!
நீ இல்லாத போது
நிலவோடு பேசிக் கொள்கிறேன்,
நீ இருக்கும் போது
நிலவோடு பேசிக் கொள்வதாய் எண்ணிக் கொள்கிறேன்..
இருளில் தானே
நிலவு இருக்கும்,
நீ உன் உடைக்குள்
அடங்கி இருப்பதை போல..
கொளுத்தும் வெயிலை விட, கொட்டும் பனியின்
கொடுமை அதிகம்
நீ இல்லாத போது...
இரவில்!
நடுங்குவது போலவே
நடித்து கொள்கிறாய்
நான் உன்னை அனைத்துக்
கொள்ள...

No comments:

Post a Comment