உன் துளி முத்தமும்
இல்லாமல் கடந்து விட்டேன்
இந்த 2016யை,
இருந்தும்
பல முத்தங்களாய்
உனக்காக சில
ஓவியங்களை
என் நெஞ்சில்
வரைந்து வைத்திருக்கிறேன்..
உனக்காகவே கவிதை
எழுதி எழுதி
கவிஞன் ஆனேன்,
உனக்கான முத்தத்தின்
வண்ண கலவையால்
ஓவியன் ஆனேன்,
காலம் எழுதிய
கவிதையில்
கண்ணீரின் படிவம்
படிந்து இருந்தாலும்,
காதலின் வடிவம்
உயிரூட்டி கொண்டே தான்
இருக்கிறது
உணர்வுகளின் மூலம்...
உணர்வுகளின் வழிய
உனக்கோர் முத்தம்
வைத்திருக்கிறேன்
என் இதழில்
அவை உன் பாதம்
எதிர் பார்த்தே காத்திருக்கிறது..
என்னை வழிநடத்தும்
உன் காதலுக்கும்
உன் கண்களுக்குமான
வாழ்த்துகளோடும்
நன்றிகளோடும்
வழியனுப்புகிறேன்,
இந்த ஆண்டின்
இறுதி நாளை...
-SunMuga-
31-12-2016 19:30 PM