December 31, 2016

2016

உன் துளி முத்தமும்
இல்லாமல் கடந்து விட்டேன்
இந்த 2016யை,
இருந்தும்
பல முத்தங்களாய்
உனக்காக சில
ஓவியங்களை
என் நெஞ்சில்
வரைந்து வைத்திருக்கிறேன்..

உனக்காகவே கவிதை
எழுதி எழுதி
கவிஞன் ஆனேன்,
உனக்கான முத்தத்தின்
வண்ண கலவையால்
ஓவியன் ஆனேன்,

காலம் எழுதிய
கவிதையில்
கண்ணீரின் படிவம்
படிந்து இருந்தாலும்,
காதலின் வடிவம்
உயிரூட்டி கொண்டே தான்
இருக்கிறது
உணர்வுகளின் மூலம்...

உணர்வுகளின் வழிய
உனக்கோர் முத்தம்
வைத்திருக்கிறேன்
என் இதழில்
அவை உன் பாதம்
எதிர் பார்த்தே காத்திருக்கிறது..

என்னை வழிநடத்தும்
உன் காதலுக்கும்
உன் கண்களுக்குமான
வாழ்த்துகளோடும்
நன்றிகளோடும்
வழியனுப்புகிறேன்,
இந்த ஆண்டின்
இறுதி நாளை...

-SunMuga-
31-12-2016 19:30 PM

December 24, 2016

பாவை முகம்

பாடுகின்ற நேரத்தில்
பைந்தமிழ் போல
பார்க்கும் கனமெல்லாம்
பாவை முகம் வேண்டும்

ஏழை என்று
என்னை ஒருத்தி
தூக்கி எறிய
கோழை நான் என்று
என்னை அறிந்தேன்,

கோழை
நான் என்ன செய்தேன்
கோவிலுக்கு போனேன்
இறைவனை வணங்கினேன்
உடலில் உயிர்
இருக்கும் வரை
என் கைகள்
இறைவனின் பாதம்
தொட்டு வேண்டிக் கொண்ட
வரம் என்னவோ
அவளுக்கு அன்னையாக
அவளுக்கு ஆறுதலாக
அவளுக்கு ஆசானாக
அவளுக்கு அனைத்துமாக
நீயே இருக்க வேண்டும்
என் இறைவா!!

-SunMuga-
06-11-2016 23:40 PM

பூனை

எலிகளை போலவே
இந்த இரவை
வேடிக்கை பார்த்துக்
கொண்டு இருக்கிறேன்
பூனையாக இரவு
என்னை உண்ணட்டும்
என்று...
-SunMuga-
24-12-2016 22:20 PM