December 24, 2016

பாவை முகம்

பாடுகின்ற நேரத்தில்
பைந்தமிழ் போல
பார்க்கும் கனமெல்லாம்
பாவை முகம் வேண்டும்

ஏழை என்று
என்னை ஒருத்தி
தூக்கி எறிய
கோழை நான் என்று
என்னை அறிந்தேன்,

கோழை
நான் என்ன செய்தேன்
கோவிலுக்கு போனேன்
இறைவனை வணங்கினேன்
உடலில் உயிர்
இருக்கும் வரை
என் கைகள்
இறைவனின் பாதம்
தொட்டு வேண்டிக் கொண்ட
வரம் என்னவோ
அவளுக்கு அன்னையாக
அவளுக்கு ஆறுதலாக
அவளுக்கு ஆசானாக
அவளுக்கு அனைத்துமாக
நீயே இருக்க வேண்டும்
என் இறைவா!!

-SunMuga-
06-11-2016 23:40 PM

No comments:

Post a Comment