கட்டெறும்பு கடித்தாலும்
காதிலே உன் குரல்
காதிலே உன் குரல்
காலை முதல் காத்திருக்கிறேன்
முழுஇரவு வரை பேசிக்கொள்ள
குளிக்காமல் குடி இருக்கிறேன்
நான் குடித்ததையும் மறைக்கிறேன்
பேசி பேசி நீ தொலைகிறாய்
நான் என்ற என்னையும்
நான் தொலைக்கிறேன்..
கைவிரல் வலிக்கிறது
கைப்பேசியை நான் பிடித்து பிடித்து
கைப்பேசியை நான் பிடித்து பிடித்து
மின்கலம் குறையும் போது
என் ஆயுளும் குறைகிறது
என் ஆயுளும் குறைகிறது
மெளனம் நான் கொண்டால்
கோபம் நீ கொள்கிறாய்
கோபம் நான் கொண்டால்
மெளனம் நீ கொள்கிறாய்..
கோபம் நீ கொள்கிறாய்
கோபம் நான் கொண்டால்
மெளனம் நீ கொள்கிறாய்..
நானும் ஆடிப் போய்விட்டேன்
ஆடிக்கு முன் கல்யாணமாம்..
ஆடிக்கு முன் கல்யாணமாம்..