April 28, 2014

Mobile Update

கட்டெறும்பு கடித்தாலும்
காதிலே உன் குரல்

காலை முதல் காத்திருக்கிறேன்
முழுஇரவு வரை பேசிக்கொள்ள

குளிக்காமல் குடி இருக்கிறேன்
நான் குடித்ததையும் மறைக்கிறேன்

பேசி பேசி நீ தொலைகிறாய்
நான் என்ற என்னையும்
நான் தொலைக்கிறேன்..
கைவிரல் வலிக்கிறது
கைப்பேசியை நான் பிடித்து பிடித்து
மின்கலம் குறையும் போது
என் ஆயுளும் குறைகிறது
மெளனம் நான் கொண்டால்
கோபம் நீ கொள்கிறாய்
கோபம் நான் கொண்டால்
மெளனம் நீ கொள்கிறாய்..

நானும் ஆடிப் போய்விட்டேன்
ஆடிக்கு முன் கல்யாணமாம்..

No comments:

Post a Comment