இளமை பொங்கும்
உன் இடையில்
என் இதழை
பதிக்க காத்திருக்கிறது
என் காதலும்
அதன் கண்களும்... 101
நீண்ட நேரங்
காத்திருந்து
நிலை இல்லாத
மனதால்
உன் மனதை
காயப்படுத்தியதாய்
எண்ணுகிறது
என் இதயம்.... 102
நீ இன்றி
இருக்க பழகிய போதும்
நீ வேண்டும் என்ற
எண்ணம்
என்னையே மாற்றிவிட்டது
அந்நொடி.... 103
தேடும் கண்களுக்கு
தேவை தேவதை
என்ற போதும்
இந்த இரவில்
வார்த்தைகள் மட்டுமே
ஆறுதல் அளிக்கிறது... 104
வான் நிறையும்
நட்சத்திரம் போல்
காகிதத்தில் நிரம்புகிறது
உன் நினைவுகள்... 105
தீராத கண்ணீர்
இருந்த போதும்
இரவு தீர்வதற்கான
அனைத்து நிகழ்வையும்
நிகழ்த்தி விடுகிறது
உன் நினைவு ... 106
உன் ஆடையில்
அனைத்தும் அழகு
அதிலும் அழகு
இந்த சிகப்பு நிறம்
என் இதழ் போல... 107
கனவைப் பற்றி கேட்டால்
வெட்கம் கொள்கிறாய்
கனவை நினவாக்க
கேட்டால்
கோபம் கொள்கிறாயே
இது என்ன நியாயம்.... 108
முதல் கனவை பற்றி
கேட்டால்
அது முதல் இரவு
என்று சிரிக்கிறாள்.... 109
மூச்சுக் காற்றும்
முத்தக் காற்றாய்
என்னை சுழல செய்கிறது
உன்னையே.... 110