எங்கோ!
பார்த்த பாதைகள்
பயணம் மட்டுமே புதிது
காடுகள் நிறைந்த போதும்
கவலை தோய்ந்த முகத்தோடு
கால்கள் போகின்றன!
தூரத்தில் ஒரு நெடுஞ்சாலை,
துக்கத்தில் மனம்
பயணம் போனாலும்
அருகிலே
ஒரு பிணத்தின் வாடை!
இன்னும்
எரியூட்டப் படாத
ஒரு பிணத்தின் வாடை!!
வழியை மறந்த
பட்டாம்பூச்சி
வழியிலே பறக்கிறது,
அதையும் கடந்து
இன்னும் போகிறது
எனது கனவின் பயணம்!
முடிவுறும் பாதையின்
முடிவில்
குளத்தின் அருகே
எரிந்து கொண்டு இருக்கிறது
எனது பிணம்!!
-SunMuga-
05-05-2016 23.19 PM
No comments:
Post a Comment