நிறைவேறாத கனவுகள்
நிம்மதியை குறைத்த போதும்
நிறைவேறும் என்ற
எண்ணங்கள் தான்
எனது எளிமையை கூட்டுகிறது
எனது இரவுகள் அனைத்தையும்
கனவுகள் பிழிந்து எடுத்த போதும்
அதன் உருவங்கள் அனைத்தும்
வெறும் இருளாக
இரவாகவே மாறி
என் கருவிழிகளில்
கனவாய்
கரைந்து விடுகிறது,
கடவுள் ஒரு பக்கம்
காமம் மறுபக்கம்
கடல் தெரியும்
கரைகள் இன்னொரு பக்கம்
காட்டு மிராண்டித்தனமான
பேய்களும் எனது பக்கமென
வெவ்வேறு கனவுகள்,
காண்பது வெறும் கனவாக
இருந்த போதும்
காலம் வெறும் கனவாகவே
கரைந்து
கண்ணின் ஏக்கமாக
வளர்கிறது!!
-SunMuga-
05-05-2016 23.13 PM
No comments:
Post a Comment