1. அயல்நாட்டுத் துணியை எரித்த குற்றத்திற்காக (1929) கைது செய்யப்பட்ட மகாத்மா காந்திக்கு, கோர்ட் 1 ரூபாய் அபராதம் விதித்தது.
2. வைட்டமின்களில் கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்டது(1935) வைட்டமின் 'K'.
3. பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறக்கும் குட்டிதான் கோவேறு கழுதை.
4. கடல் வாழ் பிராணியான வால்ரஸீக்கு, யானைக்கு இருப்பது போன்ற தந்தம் உண்டு.
5. 'குமீஸ்' என்ற புதிய பானம் குதிரைப் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
6. எகிப்திய இதிகாசத்தில் 'இசிஸ்' என்ற பெயர் ராணியைக் குறிக்கிறது.
7. 17.09.1908 அன்று உலகின் முதல் விமான விபத்து நடந்தது.
8. வவ்வால்களில் சைவம், அசைவம் இரண்டும் உண்டு.
9. உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரான 'லியனார்-டோ-டாவின்சி' ஒரு விஞ்ஞானியும் கூட.
10. உலகில் 332 வகையான கிளிகள் உள்ளன.
11. அனகோண்டா (Anaconda) என்ற பாம்புதான், பாம்பு இனத்திலேயே மிகப்பெரியது.
12. பனிச்சறுக்கு விளையாட்டுக்கு 'ஸ்கையிங்' என்று பெயர்.
13. ஈசல் பூச்சியின் ஆயுள் இரண்டு நாட்கள் மட்டுமே.
14. கழுத்திலுள்ள துளை வழியாக முட்டையிடும் உயிரினம் நத்தை.
15. தென் அமெரிக்காவின் அமேசான் காட்டுப் பகுதி 800 கோடி ஏக்கர் பரப்பளவுடையது.
16. போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி ஆங்கிலேயர், (கி.பி. 1154) நான்காம் அட்ரியன்.
17. ஒரு துளி சென்ட்டை மூக்குக் கண்ணாடியில் விட்டுத் துணியால் துடைத்தால், கண்ணாடி பளிச்சென்று இருக்கும்.
18. மனித உடலில் 25 வாட்ஸ் பல்பை எரிய வைக்கக் கூடிய மின்சார சக்தி உள்ளது.
19. நன்கு வளர்ந்த ராஜநாகம் 18 அடி நீளம் இருக்கும்.
20. நெருப்புக் கோழியின் ஆயுள் 68 ஆண்டுகள்.
21. TENS என்ற மின்சார சிகிச்சையின் விரிவாக்கம் 'Transcutaneous Electrical Nerve Stimulation'.
22. கலப்படம் செய்ய முடியாத ஒரே உணவுப் பொருள், கோழி முட்டை.
23. தரையில் பதிந்த புலிகளின் கால் சுவடுகளைப் பார்த்துத் தான் எத்தனை புலிகள் வாழ்கின்றன என்று கணக்கெடுக்கப்படுகின்றது.
24. உணவில் கடலை எண்ணையை அதிகம் சேர்த்துக் கொண்டால், இதய நோய் வர வாய்ப்பு அதிகம்.
25. இமயமலையில் வசிக்கும் 'யாக்' (Yak) எருமையின் பால் பழுப்பு நிறமுடையது.
26. ஒரு பூனை அதிகபட்சம் 14 குட்டிகள் போடும்.
27. 15.09.1830 அன்று, உலகின் முதல் ரயில் விபத்து இங்கிலாந்தில் நடந்தது.
28. நெருப்புக் கோழி கனமான இரும்புத் துண்டையும் விழுங்க வல்லது.
29. 1996- ஆம் ஆண்டு நிலவரப்படி, சந்திரனில் 14 பேர் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
30. உலகில் 200 வகையான நாய்கள் உள்ளன.
31. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான NASA (நாசா) வின் விரிவாக்கம் National Aeronautics And Space Administration என்பதாகும்.
32. இந்தியாவில் பெங்களூர் ரயில் நிலையத்தில் மட்டுமே, பிராட்கேஜ், நேரோ கேஜ், மீட்டர் கேஜ் ஆகிய மூன்று வகை இருப்புப் பாதைகளும் உள்ளன.
33. ' சொப்பியஹ்' என்றால் நரிக் குறவர் பாஷையில் வரதட்சணை என்று பொருள்.
34. டி.வி. ஆண்டெனா, இடிதாங்கியாகவும் பயன்படுகிறது.
35. உப்பளங்களில் வேலை செய்பவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, ஜலதோஷம் போன்ற நோய்கள் வருவதில்லை.
36. இந்தியாவில் ஹாக்கி மற்றும் கிரிக்கெட் விளையாட்டிற்குத் தேவையான விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் 2000 உள்ளன.
37. ஒரு குதிரை பூட்டிய வண்டிதான், உலகின் முதல் ஆம்புலன்ஸ் வண்டி.
38. 'பிளாடா' என்ற ஸ்பானிஷ் சொல்லில் இருந்து ' பிளாட்டினம்' என்ற சொல் தோன்றியது.
39. சென்னையில் 1795-லேயே லாட்டரிச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டு விற்கப்பட்டுள்ளன.
40. முதல் முதலில் அமெரிக்காவில் தான் குதிரைப் பந்தயம் தோன்றியது.
41. போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இருந்து கசிந்து, பல ஆயிரம் உயிர்களைப் பலி வாங்கிய விஷவாயுவின் பெயர் 'ஐசோ சயனைட் '.
42. உலகின் முதல் டூத்பிரஷ், வேப்பங்குச்சிதான்.
43. பள்ளிக் கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர் ரோமானியர்களே.
44. வைடூரியத்தின் ஆங்கிலப் பெயர் Cats Eye (தமிழில் பூனைக் கண்).
45. 'நீர்ச் சிலந்தி ' என்ற சிலந்தி, நீருக்கு அடியில் கூடுகட்டி வாழ்கிறது.
46. வேலை செய்யப் பயப்படுவதற்கு 'எர்கோ போபியா' என்று பெயர்.
47. மூங்கில், புல் இனத்தைச் சேர்ந்தது.
48. ' பணம்தான் மனிதனுக்கு ஆறாவது அறிவு' என்கிறார் சாமர்செட்மாம்.
49. 'டிப்பர்' என்ற பறவை நீரின் அடி ஆழத்திற்கு நீந்திச் சென்று, இரையைப் பிடிக்கும்.
50. சிகரெட், 808 டிகிரி செண்டிகிரேடில் எரிந்து புகைகிறது.