August 26, 2013

மரம் தேடிய பறவை

தாகமும் இல்லை
எந்த ஒரு மோகமும்
இல்லை...
இவள் இளைப்பாற ஒரு
மரமும் இல்லை...
இவள் ஒரு பிஞ்சு
உள்ளம் கொண்ட
ஒரு பறவை இவள்
பெயர் சந்தியா..
இவள் கண்ணோடு வாழ்ந்தாலும்
இவள் மனம் தேடுகிறது
காதல்
என்ற ஒரு மரத்தை.
கண்ணீர் விட்டுபார்க்கிறாள்
கண்களை திறந்து நாளும்
உற்றுப் பார்க்கிறாள்.
ஆனால்
காதல் என்ற மரம்
தெரியவில்லை
இந்த பறவைக்கு..
கூடி கட்டி வாழ
விருப்பமில்லை -  ஆனாலும்
கூடவே இருக்க வேண்டும்
அசைந்து ஆடினாலும்
இலைகள் உதிர்ந்து
கிளைகள் விழுந்தாலும்
இந்த மரத்தின்
நிழலில் உயிர்
போக வேண்டுமாம்...
-Sun Muga-
26-08-2013 20.43 PM

No comments:

Post a Comment