August 31, 2013

பிறந்த நாள் 30-08

இன்று எனக்கு பிறந்த நாள்.
ஏன் பிறந்தேன் எதற்காக பிறந்தேன் என்ற கேள்வி இப்போது வரை கேட்டுக் கொண்டே இருக்கிறது மனது. ஆனால் எப்போதும் நான் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பது என் பெற்றோர் சண்முகம்,பேச்சியம்மாள் இருவருக்கும் தான்.
ஒவ்வொரு நாளும் பிறக்கின்றன. இறக்கின்றன. ஏதோ ஒரு கவலையோடு முடிகிறது எனக்கு. இன்று ஏனோ கண்ணீர் வடிகிறது. யாரும் இல்லா இந்த தனிமை அறையில் தானாக முன் வந்து என் கவலைகளை குறைக்கிறது இந்த கண்ணீர். ஏன்? எதற்கு? அறிமுகம் இல்லாதவர்களிடம் தானே கேட்க வேண்டும் ஏன் வந்தாய் என்று திருப்பி என் மனம் என்னிடம் கேட்கிறது.
யாருமே இல்லாத இந்த தனிமை அறையில் ஒரு மனித உருவம் (3 படத்துல வர்ர மாறி ) ஏதோ கேட்க முற்படுகிறது. பயம் இல்லை அதை பார்க்கும் போது. என்னை போல் என்ன சிந்தனையில் இந்த உலகத்தை சுத்தி வருகிறதோ பாவம்.
இன்று என் அறையில் நான் மட்டும் தான் இருக்கிறேன். அது என்னிடம் பேசுவது எனக்கு புரியவில்லை. அதனிடம் என்ன சொல்லவதென்றும் எனக்கு தெரியவில்லை.
கடவுளே என் கண்களுக்கு தெரியும் இந்த உருவங்கள் உனக்கு தெரியவில்லையா? தயவுசெய்து அவர்கள் சோகத்தையாது தீர்த்து வை.
-Sun Muga-
31-08-2013 21.39

No comments:

Post a Comment