August 15, 2013

Office - சுடுகாடு

ஊரார் என் முகத்தை
பார்க்க இந்நாள் வரை
வெட்டிக் கதை பேசியவன்
ஏசுகிறான் என்னை
மிக வேகமாக,
தன் கோபத்தை எருவாக
மூடுகிறான் என்
முகத்தின் மீது,
என்னை கொல்லி
வைக்க இத்தனை பேரா?
என்ன பெயர் எடுத்தேன்
இவர்களிடம்,
வேண்டுமென்றா நான்
செய்கிறேன்?
இடுகாட்டில் இருப்பவனுக்கு
கூட இதயம் இருக்கும் போல,
இதயமே இல்லாத இவர்களை
என்னவென்று அழைப்பது?
அதிகாலையிலே அலைந்து
திரியும் இந்த பிணந்தின்னிக்
கழுகுகளை என்ன செய்வது.
நல்லவன் போல இருந்தே
நாளும் வெட்டியான்
வேலை தான்
பார்க்கிறார்கள் இவர்கள்.
நமக்கு வேதனை அளிக்கிற
விசயங்கள் தான் இவர்களுக்கு
காலம் வேகமாக அதாவாது
பொழுதுபோக்காக இருக்கிறது.
-Sun Muga-
15.08.2013 11.59 AM

No comments:

Post a Comment