அன்புள்ள என் காதலிக்கு,
உன் முகா எழுதிக்கொள்வது. நலம் என்று சொல்லும் அளவிற்கு நலம் இல்லை, இருந்தும் நலம் உன் நினைவு போல. வெகு நாட்களுக்கு பிறகு உனக்கொரு கடிதம் எழுதுகிறேன், ஆனால் கடிதத்தில் என்ன எழுதுவது என்று தான் தெரியவில்லை. கரைந்த கண்ணீர் துளியை பற்றி நான் இதில் எழுதினால் காகிதத்தோடு உன் கன்னங்குளியும் நனையும். நான் இன்றும் உன்னோடு தான் இருக்கிறேன் கவலை கொள்ளாதே, காலத்தின் தீர்மானம் என்ன? என்று எனக்கும் தெரியவில்லை. என்னால் இன்று உன்னிடம் அதிகம் பேச முடியவில்லை, பேச வேண்டும் என்று நீ துடிப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஏதோ ஏதோ நடக்கிறது. அதில் மனம் திணறுகிறது ஒவ்வொரு நாளும். முடிந்து போன நாளில் ஒவ்வொரு மூட்டையாக நம் நினைவுகளை மட்டுமே சேகரித்து வைத்துக் கொள்கிறேன். நான் கிழித்து எரிந்த தேதி, நானே அந்த நாளை கொன்றுவிட்டது போல ஒரு குற்ற உணர்ச்சி. உன்னை போல் எனக்கு ஒன்றும் உணர்ச்சிகள் அதிகம் இல்லை என்றாலும் ஏதோ ஒரு நடுக்கம் அந்த நாளின் இறுதியில். இறுதிச் சடங்கு போல் தான் தீர்மானிக்கிறேன் இறுதில் சேராத நாளில்.
இப்படிக்கு,
உன் முகா...
-Sun Muga-
29-06-2013 21.30 PM
உன் முகா எழுதிக்கொள்வது. நலம் என்று சொல்லும் அளவிற்கு நலம் இல்லை, இருந்தும் நலம் உன் நினைவு போல. வெகு நாட்களுக்கு பிறகு உனக்கொரு கடிதம் எழுதுகிறேன், ஆனால் கடிதத்தில் என்ன எழுதுவது என்று தான் தெரியவில்லை. கரைந்த கண்ணீர் துளியை பற்றி நான் இதில் எழுதினால் காகிதத்தோடு உன் கன்னங்குளியும் நனையும். நான் இன்றும் உன்னோடு தான் இருக்கிறேன் கவலை கொள்ளாதே, காலத்தின் தீர்மானம் என்ன? என்று எனக்கும் தெரியவில்லை. என்னால் இன்று உன்னிடம் அதிகம் பேச முடியவில்லை, பேச வேண்டும் என்று நீ துடிப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஏதோ ஏதோ நடக்கிறது. அதில் மனம் திணறுகிறது ஒவ்வொரு நாளும். முடிந்து போன நாளில் ஒவ்வொரு மூட்டையாக நம் நினைவுகளை மட்டுமே சேகரித்து வைத்துக் கொள்கிறேன். நான் கிழித்து எரிந்த தேதி, நானே அந்த நாளை கொன்றுவிட்டது போல ஒரு குற்ற உணர்ச்சி. உன்னை போல் எனக்கு ஒன்றும் உணர்ச்சிகள் அதிகம் இல்லை என்றாலும் ஏதோ ஒரு நடுக்கம் அந்த நாளின் இறுதியில். இறுதிச் சடங்கு போல் தான் தீர்மானிக்கிறேன் இறுதில் சேராத நாளில்.
இப்படிக்கு,
உன் முகா...
-Sun Muga-
29-06-2013 21.30 PM
No comments:
Post a Comment