மனங்களில் இனைந்தாலும், விரல்கள் இனையாத "வாழ்க்கை" நம் வாழ்க்கை. என் இதழ்களில் இருந்து புலப்படும் வார்த்தைகள் அனைத்தும் உன் காதுகளை மட்டுமே வருடிருக்கும் மிகவும் ரகசியமாகவே நம்முள். இன்றும் அவ்வாறு தான் உள்ளது. ஆனால் மிகவும் கொடுமையான நொடிகளில். நொடியில் மாறும் வாழ்க்கை, ஏன் நம் வாழ்க்கைக்கு கை கொடுக்க மறுக்கிறது என் உயிரே!! என்று இனைவோம் என்று காத்திருக்கிறோம் அந்த நொடியின் விளிம்பில் வாழ. வாழும் வாழ்க்கை உன்னோடு இருந்தாலும் அதற்க்கும் உயிர் வேண்டும் என்று தான் உயிர் வாழ்கிறோம். உண்ணும் உணவை கூட உண்ணும் போது உன்னோடு உண்டால் எவ்வாறு இருக்கும் என்றே யோசிக்க தோன்றுகிறது. என் உடல் முழுவதும் தொலைக்காட்சியை நோக்கி அமர்ந்திருந்தாலும் கருவிழிகள் உற்று நோக்குவது உன் விழிகளை மட்டுமே. ஒவ்வொரு நொடியும் யோசிக்கிறேன் நம்மை பற்றி அப்போதவது அந்த நொடியின் இறுதியில் நாம் இணைவோம் என்று. ஒருவருக்கொருவர் மாறி மாறி யோசிக்கிறோம் நாம் தாம் கஷ்டப்படுத்துகிறோம் என்று. உண்மை அதுவல்ல. நம்மை நாமே கஷ்டப்படுத்துகிறோம் முடிவெடுக்க தைரியம் இல்லாததால்....
-Sun Muga-
26-06-2013 21.51 PM
-Sun Muga-
26-06-2013 21.51 PM
No comments:
Post a Comment