அநேக இரவுகளில்
அதிகம்
உன்னை தேடும் போது
ஒரு பைத்தியத்தின்
கண்களை
என் உயிரெங்கும்
தழுவ விட்டுருக்கிறாய் நீ,
சில இரவுகளின்
அதன்
மெளன ஒளிகளை
நானும் பார்த்தபடி
அதனோடு
பேசிக் கொண்டே
இருக்கிறேன்,
இரவுகள்
இமைகளில் கலந்து
இருளின் வழியே
வெளியேறும்
நேரத்தில் விடிந்து
விடுவது கூட
தெரியாமல் உறங்குகிறது
இந்த பைத்திய உடல்..
-SunMuga-
21-09-2016 23:15 PM