வெறுமை
நிரம்பிய போது
வெற்றிடம் பார்த்தேன்
என் வேதனைகள்
அதில்
நெளிந்து நெளிந்து போனது,
வெறுமை கரைத்த
கவிதையில் ஏனோ
காலத்தை கரைக்க
காலம் வழி விட மறுக்கிறது,
காலம் ஏனோ
அத்தனை வன்மத்தையும்
என் மீது காட்டிக் கொண்டு
இருந்த போதும்,
அதே காலம் தான்
அதன் வலிகளையும்
சுமக்கிறது
வேறு வழிகள் இல்லாமல்...
-SunMuga-
19-09-2016 12:15 AM
No comments:
Post a Comment