மழை கண்ட
ஒரு பெளர்ணமி
இரவில் மயக்கம்
கொண்டேன்
என் மழலை கேட்கும்
சிறு கேள்வியில்
அப்பா!
நிலா வருமா?
அன்று ஏனோ,
நிலவோடு
கனவும் வந்தது.,
கனவில்
என் கைகளை பிடித்து
வானை உற்று நோக்கி
மழை பெய்ஞ்சா
நிலா நனையாதாப்பா!!
என்றால் அவள்,
மழையோடு
என் கனவும்
என் கண்களும்
நனைந்தது...
என் கண்னை
நனைக்கும்
கவிதை நீ!
தெய்வத்தின்
சாயலும் நீ!
தெய்வத்தின்
குரலும் நீ!
தெய்வம் தந்த
தேவதையும் நீ!!
-SunMuga-
16-09-2016 22:30 PM
No comments:
Post a Comment