பாதி உறக்கத்தில்
கண் விழித்து
பார்த்த போது
என்னோடு
இரவு நிர்வாணமாய்
படுத்துக் கிடந்தது,
அதன் உடலெங்கும்
இருளின் வண்ணம்,
மெல்ல மெல்ல
இருளில் கலந்து
நானும் அதன்
உடலை தடவி பார்த்தேன்,
அதற்கு
ஒரு ஆணைப் போல
குறியும் இல்லை,
ஒரு பெண்னைப் போல
முலைகளும் இல்லை,
ஆனால் அதன்
கைகளில் மட்டும்
ஒரு பேனா இருந்தது,
எதற்கு பேனா என்று
கேட்டேன்!
உறக்கம் வராத
இரவுகளில்
உருப்படியான
ஒரு கவிதை எழுதுவதற்கு
என்றது அது!!!
-SunMuga-
21-09-2016 22.00 PM
No comments:
Post a Comment