விடியலை நோக்கிய
இந்த இரவின்
பயணத்தில்
கவிதை வார்த்தைகளின்
வழியே பயணிக்கிறது,
வார்த்தைகள்
வழித்துணையாக
என் வாழ்க்கை துணையை
மாறுபட்ட பல வழிகளில்
தேடிக் கொண்டு இருக்கிறது
தேடல் நிரம்பிய
இரவில்
இருள் கலந்திருந்த போதும்
இருளிலும் அவள்
இல்லாமல் இல்லை
என் இமைகள் முழுதும்
இமை மூடிய போது
கைகள் கோர்த்து
காதல் சொல்லி
கதைகள் பல சொல்லி
காலை வரை
காத்திருந்த மனம்
ஏனோ
எதிர்பார்த்தது
விழியில் ஒரு முத்தம்.
முடிவுறும் முத்தம்
ஏனோ
என் வாழ்வில் கிடையாது
என்று உணர்த்தியது
அந்த விடியல்
மட்டும் தான்..
-SunMuga-
19-09-2016 01:15 AM
No comments:
Post a Comment