மனிதன் என்று
நான்
உன்னை நினைத்தால்
நீ மிதித்த
மண்ணும்
என்னைப் பார்த்து சிரிக்கும்
இவனா?
மனிதன் என்று.
மனிதன் என்று
நான்
உன்னைப் பார்த்தால்
நீ பார்க்கும்
கண்ணாடியும்
கண்ணீர் விடும்
இவனா?
மனிதன் என்று...
மனிதன் என்று
நான்
உன்னை நினைத்தால்
கழிவறையில்
நீ கழித்த மூத்திரத்தின்
வாடை
என் மனம் மீது அடிக்கும்
இவனா?
மனிதன் என்று...
மனிதன் மடிந்தால்
புழுக்களுக்கு
உணவு அவன்..
நான் வாழும்
இந்த மண்ணில்
புழுவாக
என்னை உண்ணும் போது
நீ எப்படி
மனிதன் ஆவாய்....
-SunMuga-
09-09-2015 22.25 PM
No comments:
Post a Comment