October 9, 2015

2015 கவிதைகள் 1241 to 1250

என்னை
எப்பொழுதும் சுமக்கும்
உன் கண்களிலே
வேர்வைக்கு பதில்
கண்ணீரே வடிகிறதோ!!    1241

மீனைப் போல
துள்ளிக்
கொண்டு இருக்கிறாய்
தண்ணீரில் இல்லை
என் கண்ணீரில்
என்னைப் பிரிந்து...     1242

தனிமை சூழ்ந்த
இடமொன்றில்
இனிமையாய் இருக்கிறது
உன் ஒவ்வொரு நினைவும்.. 1243

வினோத
உணர்வுகளின் முடிவில்
உன்னையே நினைத்து
இரவு நிரம்பிய
வானை உற்று பார்க்கிறேன்
உன் பார்வைகள்
என் மீது படுவது போல.. 1244

அநேக இரவுகள்
அதிகம்
உன்னைத் தேடியே
விடிகிறது என் அன்பே!!   1245

மகிழ்ச்சி நிறைந்த
இரவுகள் எல்லாம்
நம்
காதல் கவிதைகளின்
இன்னொரு பக்கம்....  1246

என் ஆன்மாவின்
அடி ஆழத்தில்
உன் காதலின் வெளிச்சம்
தான் என்னை
உயிர் வாழ வைக்கிறது..  1247

ஜீவனற்ற
என் உடலில்
ஜீவனுள்ள
பல கனவுகள்
இன்னும் இன்னும்
உயிர் எழுந்து
கொண்டே தான்
இருக்கிறது..    1248

சங்கை நிரப்பும்
காற்றை போல
என்னை
உன்னைக் கொண்டு நிரப்பி
உன் மூச்சுக் காற்றில்
நானும் வாழ்கிறேன்
ஒலியாய்...  1249

எண்ணற்ற கிளைகள்
கொண்டுள்ளது
என் கனவுகள்
அதன் கனியாய்
உன் முத்தம்...  1250

No comments:

Post a Comment