என்னை
எப்பொழுதும் சுமக்கும்
உன் கண்களிலே
வேர்வைக்கு பதில்
கண்ணீரே வடிகிறதோ!! 1241
மீனைப் போல
துள்ளிக்
கொண்டு இருக்கிறாய்
தண்ணீரில் இல்லை
என் கண்ணீரில்
என்னைப் பிரிந்து... 1242
தனிமை சூழ்ந்த
இடமொன்றில்
இனிமையாய் இருக்கிறது
உன் ஒவ்வொரு நினைவும்.. 1243
வினோத
உணர்வுகளின் முடிவில்
உன்னையே நினைத்து
இரவு நிரம்பிய
வானை உற்று பார்க்கிறேன்
உன் பார்வைகள்
என் மீது படுவது போல.. 1244
அநேக இரவுகள்
அதிகம்
உன்னைத் தேடியே
விடிகிறது என் அன்பே!! 1245
மகிழ்ச்சி நிறைந்த
இரவுகள் எல்லாம்
நம்
காதல் கவிதைகளின்
இன்னொரு பக்கம்.... 1246
என் ஆன்மாவின்
அடி ஆழத்தில்
உன் காதலின் வெளிச்சம்
தான் என்னை
உயிர் வாழ வைக்கிறது.. 1247
ஜீவனற்ற
என் உடலில்
ஜீவனுள்ள
பல கனவுகள்
இன்னும் இன்னும்
உயிர் எழுந்து
கொண்டே தான்
இருக்கிறது.. 1248
சங்கை நிரப்பும்
காற்றை போல
என்னை
உன்னைக் கொண்டு நிரப்பி
உன் மூச்சுக் காற்றில்
நானும் வாழ்கிறேன்
ஒலியாய்... 1249
எண்ணற்ற கிளைகள்
கொண்டுள்ளது
என் கனவுகள்
அதன் கனியாய்
உன் முத்தம்... 1250
No comments:
Post a Comment