வேர்வை:
இந்த மழையில்
நனைவதற்கு குடையாய்
உடைகள் எதற்கு? 1291
உன் விரலை தொட்டால்
மின்னல் வெட்டும்
உன் மார்பை தொட்டால்
இடி இடிக்கும்
உன் இதழை தொட்டால்
மழை இனிக்கும்... 1292
ஒன்றை ஒன்று
பிரிந்து விழும்
மழைத்துளி
மண்ணில் சேர்கிறது
ஏன்
நாம் இருவரும்
சேர்வதற்காய் கூட
இருக்கலாம்... 1293
கவிதையெங்கும்
மழைத்துளியின்
ஈரங் கசிந்து கிடந்தது
உன் ஈரத்துணியை
பிளிந்து
என் கைகளுக்கு இடையே!! 1294
இடி இசைக்கும்
கொடிய இரவில்
கனவுகள் தொடங்கியது
மின்னல் பட்டு
வெளிச்சம் வந்த பிறகு
கனவு கலைந்து
காதல் பிறந்தது... 1295
காற்றும்
என் காதலும்
தனியாய் இசைப்பதில்லை
தன் ராகங்களை
மரத்தின் இலைகளோடும்
இலையின்
காய்ந்த சருகுகளோடும்
இம் மண்ணின்
வாசனைகளோடும்
எங்கும் நிறைந்து இருக்கிறது..1296
நம் விருப்பங்களுக்கும்
கனவுகள் இருக்கிறது
விருப்பங்களில் இருந்து
விடுபடுவதற்கு
விருப்பங்களை விட வேண்டும்
இல்லை
விருப்பங்களில் அதிகம்
ஈடுபட வேண்டும்.. 1297
கொஞ்சம் கொஞ்சமாக
வளரும்
உன் ஞாபகங்கள்
என்னை வளர்க்கிறது
உன் பிள்ளையாக... 1298
கூந்தலில் இருந்து
உதிரும் மல்லிகை போல
கனவுகளும்
காத்திருக்கிறது
நிர்வாணத்தின்
உடைகளை ஏற்க.. 1299
எல்லாமே
கனவாகி போன காலத்தில்
கனவுகளின் மிச்சமாய்
கண்ணீர் இருக்கிறது
உன்னோடு
நான் நனையும்
முதல் மழையின் ஈரத்தில்.. 1300
No comments:
Post a Comment