October 19, 2015

2015 கவிதைகள் 1251 to 1260

உன் உடலோடு
உரசிப் போகும்
இரவெல்லாம் இனிது
என் உயிரே
இனி எப்போது
அமையும்
அந்த இரவு...     1251

இரவின் ரகசியம் தான்
இரவுக்கு வெளிச்சம்
வெளிச்சத்தின் ஒளியாய்
நீ
எப்பொழுதும் எனக்கு..  1252

என் பகலில்
பதியும்
கனவுகள் எல்லாம்
இரவில்
உன்னிலே வெளிப்படுவது
தான்
எனக்கு அதிசயம் அன்பே!!   1253

மெளனத்தை உடைத்து
வெளியேறும்
இனிய இரவின் ஒலி
உன் முத்தம்...    1254

முத்தமிட்டு
நீ முடித்தாய்
அந்த இரவை!

இரவோ!
சத்தமிட்டு அழுகிறது
இரவு முடிந்து விட்டதே!என்று.. 1255

ஒவ்வொரு முறையும்
உன் கண்களை பார்த்து
கவிதை எழுதுகிறேன்
உன் இதழை
பேனாவாக கொண்டு...   1256

உறக்கமின்றி
உன்னைப் பற்றி
எழுதுவதிலும் ஒரு
சுகம் தான்
உன்னோடு உறங்கி
கழித்த சுகம்
ஏற்படுவதால் என் அன்பே!!  1257

வாழ்வைப் பற்றிய
உயர் சிந்தனையிலும்
உன்னைப் பற்றிய
கவிதை தோன்றுவதால் தான்
என் உயிர் வாழ்கிறது
என்னைப் பற்றிய
உன் கவிதையில்
நானும் வாழ்வதால்...     1258

ஆணாய் பிறந்து
இந்த பெண்ணின்
உடலிலும்
உள்ளத்திலும்
வளர்கிறேன்
காதலின் உயிராக...    1259

புது உடைகளுக்கு பதில்
ஒரு புதுக் கவிதையை
உடுத்திக் கொள்கிறேன்
என் பிறந்த நாளுக்கு...   1260

No comments:

Post a Comment