August 29, 2016

துரதிருஷ்டம்

முப்பது வயது
என்று நினைக்கும் போது
முப்பது வயதில்
இறந்து போன
சில்வியா ப்ளாத்
நினைவிற்கு வருகிறாள்

எல்லா கலைகளையும் போலவே
சாவதும் ஒரு கலை,
அதை
நான் முழுமையாக நிறைவேற்றுவேன்.
என்று கவிதை
எழுதியவள் அவள்.

உயிர்களை கடந்து
உணர்வுகளை உள்ளடக்கியது தான்
ஒரு கவிதை,
அதை வார்த்தைகள் நிரம்பிய
இரவின் கனவிற்குள்
கொண்டு வந்து
கடவுளாக காணும்
செயல் என்னவோ
ஒரு கவிஞனுக்கு
இயல்பான ஒன்று.

ஆனால் அதையும் மீறி
சாத்தனோடு கைகோர்த்து,
கால்களை விரித்து
இமை மூடி
என் கனவுகளை
உட்சொருகும்
ஒரு பெண்ணைப் பற்றிய
துர்கனவு வரும்போது
வலிகள் உணர்ந்து
வழியும்
தூமைச் சொட்டின்
வாசம் அறியாமல்,
என் நாசிகளில் கூட
சில வேசிகளின்
வேர்வை நாற்றமெடுத்து
வேதனை தரும் இரவுகளில்
இன்னும்
என் உயிர் வாழ்ந்து
கொண்டு இருப்பது தான்
எனது துரதிருஷ்டம்....

-SunMuga-
28-08-2016 22-40 PM

No comments:

Post a Comment