என் கனவை
நானே எரித்து
கனவின் சாம்பலை
சிறு குவளையில் அடைத்து
என் கண்ணீரின்
கடலில்
நானே கரைத்தேன்,
மெல்ல மெல்ல கரைந்து
கடலோடு கலக்கும் போது
இறந்த
என் உடலெங்கும்
பாவத்தின் தழும்புகள்
கரைந்து கொண்டே இருந்தது..
கரைந்த தழும்புகளின்
வரமாய்
இறந்த என் உடல்
மீண்டும் உயிரோடு
எழுந்ததாக
ஒரு கனவே பிறந்தது....
-SunMuga-
12-11-2016 21:00 PM
No comments:
Post a Comment