November 28, 2016

நிர்வாண ஓவியம்

சிறுவன்:
நிர்வாணமாய்
ஒரு பெண்ணை வரைந்தால்
பிஞ்சிலே பழுத்தது
என்பார்கள்..

இளைஞன்:
நிர்வாணமாய்
ஒரு பெண்ணை வரைந்தால்
காமப்பசி வந்துவிட்டது
என்பார்கள்..

முதியவன்:
நிர்வாணமாய்
ஒரு பெண்ணை வரைந்தால்
காமப்பசி இன்னும் தீரவில்லை
என்பார்கள்..

எப்படி
நானும் சொல்வேன்
நிர்வாணம் என்பது
நிரந்தரமாய்
உடைக்குள்
வசிக்கும்
எல்லைகளற்ற
ஒரு வானம் என்று!!

-SunMuga-
28-11-2016 22:10 PM

No comments:

Post a Comment