சிறுவன்:
நிர்வாணமாய்
ஒரு பெண்ணை வரைந்தால்
பிஞ்சிலே பழுத்தது
என்பார்கள்..
இளைஞன்:
நிர்வாணமாய்
ஒரு பெண்ணை வரைந்தால்
காமப்பசி வந்துவிட்டது
என்பார்கள்..
முதியவன்:
நிர்வாணமாய்
ஒரு பெண்ணை வரைந்தால்
காமப்பசி இன்னும் தீரவில்லை
என்பார்கள்..
எப்படி
நானும் சொல்வேன்
நிர்வாணம் என்பது
நிரந்தரமாய்
உடைக்குள்
வசிக்கும்
எல்லைகளற்ற
ஒரு வானம் என்று!!
-SunMuga-
28-11-2016 22:10 PM
No comments:
Post a Comment