யாருமற்ற
என் அறையில்
தனிமையின்
சுவற்றை பார்த்துக்
கொண்டு இருந்தேன்,
ஒரு ஓவியமும்
என் கண்களுக்கு
சிக்கவில்லை,
சிக்கலான விஷயம் தான்
மனம் குழப்பத்தில்
இருக்கும் போது,
எப்படி சிக்கும்
உருவங்கள் நிறைந்த
வாழ்க்கை என்ற
மிகப்பெரிய ஓவியம்!
-SunMuga-
28-11-2016 21:50 PM
No comments:
Post a Comment