November 3, 2016

வறுமை

உடைகள் அணிந்து
நிர்வாணமாய்
என் கனவுகள்
நிகழ்காலத்தின் வறுமையை
பிரதிபலிக்கிறது..

கனவுகள் மாறுமா?
அல்லது
காலம் மாறுமா?

எல்லாமே
கனவாய் போன
வாழ்க்கையில்
காலம் தரும்
கவலைகள் தான் தீருமா?

தீராத கனவின்
முடிவில்
நிர்வாணமாய்
நின்று
நிலையில்லாத
காலத்தின் மடியில்
நானும் வடிப்பேன்
என் கவலையின்
ஒரு துளி
கண்ணீர் துளியை...

-SunMuga-
03-11-2016 23:20 PM

No comments:

Post a Comment