October 30, 2014

இரவு

நம் பிரிவை நினைத்து
விரியும் இந்த இரவில்
நான் எப்படி கண்ணீர்
இல்லாமல் கடக்க முடியும்?
கனவே!! யாரும் அற்ற
என் அறையில்
இரவில் நான் உன்னோடு
உறங்க தான் நித்தம்
வணங்குகிறேன் அந்த
கடவுளையும் கண்ணீரோடு.,
ஏதோவொரு காரணம்
உன் பிரிவிற்கு,
இரவில் தான் புரிகிறது
அது நான் என்று.,
இரவுக்கு முன் பொழுதில் நீ
உச்சரித்த வார்த்தைகள் தான்
வளர்க்கிறது என் கனவுகளை
நித்தம் உன்னோடு.,
இரவில் எனக்காக நீ பாடும்
பாடல் தான் என்னை
பாடலாக வாழச் சொல்கிறது
உன் குரலில்....
என்னைவிட இரவின்
கொடுமையை நீ தான்
அதிகமாய் அனுபவித்து
இருப்பாய் என்று
எனக்கும் தெரியும்....
ஏனோ ஒரு சில
இரவில் உன்னை
இறுக்கமாக கட்டி அனைத்து
இறந்து விடவே தோன்றுகிறது..
அன்பே!!
உன் விழியின் பார்வையை
பார்த்தே இத்தனை இரவுகளை
கடந்து விட்டேன் என் விழியை
மூடிக் கொண்டு...
உறக்கம் வராத இரவுகளில்
வானின் நட்சத்திரங்களை
எண்ண தொடங்கிவிடுகிறேன்
உன் முத்தத்தை எண்ணுவதாய் நினைத்து....
உன் இதழ் குவித்து
காற்றின் வழியே
நீ கொடுத்த முத்ததின்
மூச்சுக் காற்றைத் தான்
பல வருடங்கள் தாண்டியும்
நான் சுவாசித்துக் கொண்டு
இருக்கிறேன்...
-SunMuga-
30-10-2014 23.00 PM

October 29, 2014

மாடிப்படி

மாடிப்படியில் ஒரு முறை
நீ கொடுத்த முத்தத்தால்
இப்போது ஒவ்வொரு
முறையும் ஏறிப் பார்க்கிறேன்;
உன்னையே எதிர் பார்க்கிறேன்;
மிக நீண்ட இரவில்
உன்னோடு தொலைபேசியில்
உரையாட அவ்வப்போது
உதவுவது உன்
பாதம் மிதித்த இந்த
மாடிப்படி தான் என் உயிரே!
நீ இல்லாத இரவில்
உறங்கச் செல்லும் முன்
ஒருமுறை முத்தமிட்டுத்
தான் செல்லுகிறேன்
உன் பாதம்
பட்ட அந்த மாடிப்படியில்...
நினைவே!! எப்போதெல்லாம்
உன்னை நினைக்கிறேனோ
அப்போதெல்லாம் நான்
வந்து அமர்வது நம்
வீட்டு மாடிப்படி தான்...
உறக்கம் வராத ஒரு சில
இரவில் அந்த மாடிப்படிகளிலே
உறங்கி விடுகிறேன்
உன் மடியாக அந்த
படிகளை நினைத்து
என் அன்பே!!
-SunMuga-
29-10-2014 21.45 PM

மூன்றாம் பிறை

அன்பே!
உன்னை கவனிக்க
தவறும் அந்த மூன்று
நாட்கள் எனக்கு
எப்போதும் பிடிப்பதில்லை,
ஆனால் எனக்காக
பிறந்தவன் நீ,
எப்படியடா நீ இப்படி
மாறினாய்;
என்னை முத்தமிடவே
சமையல்அறை பக்கம்
ஒதுங்கியவன் நீ,
இப்போதெல்லாம்
நீயே சமைத்து
எனக்கு ஊட்டி விடுகிறாய்
என் வலியின் வேதனை
நீ உள்வாங்கிக் கொண்டு..
என் மீதான உன்
அன்பை கொஞ்சம்
குறைத்துக் கொள்
என் அன்பே!
உன்னதமான உன் அன்பால்
இப்போதெல்லாம் நான்காம்
நாளும் நீடிக்கிறதடா
என் மடையா!!
-SunMuga-
29-10-2014 21.00 PM

October 28, 2014

கற்பம்

கள்வா!
இந்நாள் உன்னால்
நான் கற்பம் தரித்தேன்,
கண்ணால் சொல்ல
தவித்தேன்,
உன் பின்னால்
அனைத்து உன் முதுகில்
முத்தமிட்டு சொல்ல
துடித்தேன்,
உள்ளே துடிக்கும்
நம் உயிர்,
உள்ளுக்குள்ளான ஏதோவொரு
ஆனந்தம்,
ஆணோ, பெண்ணோ?
அய்யோ!!
நானும் இனி ஒரு தாய்!!
நீயும் இனி ஒரு என் குழந்தை..
உன் வேட்டியில் தொட்டில் கட்ட
சொல்லிக்கொடு,
உன் குரலில் தாலாட்டு பாட
சொல்லிக்கொடு -என் கள்வனே,
உன்னோடு நடக்க வேண்டுமடா!
கால்கள் வலிக்க
வேண்டுமடா!
உன்னால் ஒத்தனம்
கொடுக்கப் பட வேண்டுமடா!!
அவ்வப்போது உன் கைவிரல்
என் வயிற்றில் பதியப் பட
வேண்டுமடா!!
இந்நாள் என் வாழ்வின்
முக்கியமான நாள் என்
அன்பே!!
- SunMuga-
28-10-2014 22.45 PM

முதல் முறை

முடிவுகள் இல்லையடி
உன் மீதான
என் காதலுக்கு
முதல் முறை உன்னிடம்
கேட்கிறேன் ஒரே ஒரு
முத்தம்..
உந்தன் முத்ததின்
மொத்த சிறப்பையும்
அறிந்தது என்
இதழாக மட்டுமே
இருக்க முடியும்
இந்த உலகத்தில்...
நீ என்னோடு இல்லாத
இந்த உலகத்தில்
எப்போதும் எனக்கு
துணையாக இருப்பது
உன் இதழ் மட்டுமே!!
முதல் முறை அதுவும்
ஒருமுறை நீ கொடுத்த
முத்தத்தில் தான்
இன்னும் இருக்கிறது
என் உயிர்;
நீ மறுமுறை கொடுப்பதற்கு..
வறுமையில் நான்
இருக்கிறேன்;
வருத்தம் கொள்ளாதே
முத்தங்கள் அதிகமாக
தான் இருக்கிறது என்
இதழில்....
கனவோடு உன்னோடு
நான் வாழும்
வாழ்க்கை உனக்கும்
எனக்கும் மட்டுமே தெரியும்..
நான் அப்போதே
உன் பெயரை என் பெயரோடு
இணைத்துவிட்டேன்
நீ எப்போது என்னை
அனைத்துக் கொள்ள போகிறாய்!!!
அன்பே!!
ஆட்கள் இல்லாத
இடம் தான் இப்போது
என் போக்கிடம்
கண்ணீர் விடுவதற்கு!!!
-SunMuga-
28-10-2014 21.30 PM

October 27, 2014

புடவை

எனக்கும் ஆசையடா!!
நான் உடுத்திய புடவையில்
உனக்கு ஒரு தொட்டில்
கட்டி தாலாட்டு பாட....

முன்பெல்லாம் கண்ணாடியை
பார்த்து புடவை கட்டுவேன்;
இப்போதெல்லாம்
என் புடவையை உன்
கண்களை காணாமல்
ஒழுங்காய் கட்ட முடிவதில்லை;

அன்பே!!
அம்மா அதிகமாக திட்டுகிறாள்,
ஒரு புடவை கட்ட
இரண்டு மணி நேரமா? என்று,
அவளுக்கு என்ன தெரியும்
நீ என்னோடு இருப்பது..

வீட்டில் அம்மா
இல்லாத நேரங்களில்
உன்னை கட்டி அனைத்து
அனைத்து நானும்
கற்றுக் கொண்டேன்
புடவை கட்ட....

என்னைப் புடவையில்
உன்னைத் தவிர
வேறு எவரும்
பார்த்து விட முடியாது,
புடவை என்ன? நூலால்
நெய்ததா? என்ன
உன் இதழால் அல்லவா!!!

ஒரு சில நாளில்
என் புடைவையின் மீதே
எனக்கு பொறாமை
எழத் தான் செய்கிறது
எனக்கான முத்தத்தை
புடவை பெரும் போது..

சமையல் அறையில்
வடியும் என் வேர்வையை;
உன் கை விரல் தீண்டிய
என் சேலை முந்தானையால்
தொடைத்துக் கொள்கிறேன்;
என்னையே நீ அனைப்பது போல நினைத்துக் கொண்டு..

நீ எப்போதடா மதம்
மாறினாய் ஒரு
கன்னத்தில் கொடுத்தால்
மறு கன்னத்திலும்
கேட்கிறாய் என் முத்தத்தை..

ஒரு வேலை என் உயிர்
பிரிந்தால், இறுதியாக
நீ வாங்கி ந்த புடவையில்
பிரிய வேண்டும், அதன் பின்
உறுதியாக நீ வாங்கி
கொடுத்த முதல் புடவையில்
என்னை நீ தூக்கி செல்ல
வேண்டும் கல்லறை நோக்கி...

-SunMuga-
28-10-2014 20.45 PM

October 25, 2014

கல்லூரி

படிக்கும்போது
எப்போதும்
முதல் மதிப்பெண்
நான் தான் எடுப்பேன்;
முதல் முறை முத்ததின்
மொத்த மதிப்பையும்
பெற வைத்தது நீயாக
மட்டுமே இருக்க
முடியும் இப்பொழுதும்..
பாடத்தை கவனிக்காமல்
எப்போதும் என்னையே
கவனிப்பாய்; நான் அப்போதும்
உன்னையே கவனிப்பேன்..
பரிட்சை பேப்பரில்
பிள்ளையார் சுழி போடுவதற்கு
பதில் உன் இதழையே
வரைய பழகி விட்டேன்
என் அன்பே!!
பாதியிலே பரிட்சையை முடித்து
வந்து பேனாவின் மொத்த
மையையும் உன் மீதே
தெளித்தேன் முத்தமாக...
தேர்வுகளில் நான் தேர்வு
ஆனது என்னவோ உன்
தோளில் சாய்ந்த பிறகு தான்..
கணக்கு பாடத்தை விட
உன் காதல் பாடமே
என்னை அதிகம்
படுத்துதடா!!!
வகுப்பறையின் பலகையில்
சூத்திரம் எழுதுவதற்கு பதில்
சூரியனே உன் பெயரையே
எழுதி வந்தேன் என்னையும்
அறியாமல்....
கல்லூரியின் கோடை
விடுமுறையில் கூட
உன்னால் எனக்கு
குளிர்கிறது என் அன்பே!!
ஆச்சரியத்தோடு நீயும்
கேட்டாய் எப்படி படிக்காமல்
பாஸ் ஆகிறாய் என்று;
நீ படித்ததை தான்
நான் வாங்கி கொண்டேனே
உன் இதழ் வழி,
நீ படித்தால் போததா என்ன?
பலமாய் சிரித்து,
"சீ" போ!!! என்று
வெட்கத்தோடு என்னை
மெதுவாய் தள்ளினாய்...
சுருக்கெழுத்தை இப்போதெல்லாம்
சுகமாய் முடித்துவிடுகிறேன்
பென்சிலை உன் கை விரலாய்
நினைத்துக் கொண்டு..
அய்யோ!! மாட்டிக்கொண்டேன்
என்று நான் நினைத்தேன்,
அப்புறம் தான் தெரிந்தது
நீ தான் என்னிடம்
மாட்டிக்கொண்டாய் என்று;
யாரும் இல்லாத வகுப்பறையில்
நீயும் நானும் இருக்கும்போது..
கல்லூரியின் கணினி
அறையில் கூட உன்
காதலே வேலை செய்கிறது
என் மடையா!!!
மழைக்காக கூட நான்
ஒதுங்கிராத நூலகத்தின்
பக்கம் உனக்காக
ஒடி வந்தேன்,
யாரோ ஒருவன் எழுதிய
புத்தகத்தை நீ
வாசித்துக் கொண்டு இருந்தாய்,
நானும் வாசித்து முடித்தேன்
உன் இதழில் பிரதிபலித்த
வார்த்தைகளின் மூலம்...
கல்லூரியின் கதவை
அடைக்கும் வரை
என்னுள்ளே அடங்கி
மீண்டும் அடம்பிடிப்பாய்
எப்போது பார்ப்போம் என்று..
-SunMuga-
26-10-2014 22.00

October 14, 2014

எச்சில்

காலை, மாலை,
இரவு,பகல் என்று
ஒவ்வொரு கணத்திலும்
கண்ணீரால் நான் அலம்பி
பார்த்துவிட்டேன் ஆனாலும்
கரைய மறுக்கிறது
உன் எச்சில் துளியின் ஈரம்..
என் காதல் மீது
உன்னால் உமிழப் பட்ட
எச்சில் துளிகள்
உளர இன்னும்
எத்தனை காலம் ஆகும்
என்று எனக்கே தெரியவில்லை;

October 13, 2014

பசி

பசி என்ன? பெண்ணே
பசி! உன்னை
ரசிப்பதற்கே வாய்ப்புகள்
அற்ற போது!!

நடுஇரவில் பசிக்கும் போது
உன்னைப் பற்றி
எழுத ஆரம்பித்து விடுகிறேன்!!
அதில் ஏனோ ருசி அதிகம்
என்பதால்!!!

எதிர் எதிரே அமர்ந்து
உன் விழியால்
நீ ஊட்டிய உணவிற்கு
பின் பசி என்பதே
எனக்கு இல்லை..

இப்போதெல்லாம்
பசியோடு படுத்ததும்
உறங்கி விடுகிறேன்!
உன் நினைவை
அனைத்துக் கொண்டு!
உன் மூச்சுக் காற்றை
நான் உள் வாங்கி
கொண்டு!!

பசி என்று
நான் சொன்னவுடன்
எப்போதும் தயாராக
வைத்து இருக்கிறாய்
எனக்கான உணவை-
உன் முத்தம்...

உயிரே இப்போதெல்லாம்
உன் உணவையும் எனக்கே
ஊட்டிவிட்டு என்
முத்தத்தை மட்டும் பெற்றுக்
கொள்கிறாய் ஏன்?

என் பசிக்கு தன் மார்போடு
சேர்த்து பால் ஊட்டியவள்
தாய் என்றால்; என்னை
உன் கண்ணோடு சேர்த்து
காதலை ஊட்டியவள் நீயும்
ஒரு தாய் தானே!!!

என் மீதான காதல்
மொத்தத்தையும் உன்
கண்களிலே வைத்து
இருக்கிறாயே!!!
சிரிக்கும் போதும்,
அழும் போதும்...

எதுவுமே நடக்காத போதும்
எல்லாமும் நடந்ததாய்
நினைத்துக் கொள்கிறேன்
உன் ஒற்றை முத்தத்தில்..

விடிந்து நான் எழுவதற்கு முன்
விவரமாய் குளித்து முடித்து
விடுகிறாய் - அடுத்த அனைப்பிற்கு.,
பட்டிக்காட்டில்
படிகளை கூட தாண்டாமல்
எப்படி கற்று தேர்ந்தாய்
இத்தனை வித்தைகளையும்
என்னை கவர....

பசி எடுத்தாலும்
எனக்காகவே
வீட்டினில் காத்துருக்கிறாய்
பின் எனக்கும்
பசி எடுக்க ஆரம்பித்து விடுகிறது...

நல்ல கவிதை அமைய
நான் வார்த்தைகளை
கோர்ப்பது இல்லை,
மாறாக உன் இதழ்களை
கோர்த்துக் கொள்கிறேன்
என் கண் இமைகளில்...

கள்வா!!
தீராத காதல் மோகத்தில்
நான் உன்னை கட்டி அனைத்தேன்,
ஏனோ கண்ணில் கண்ணீர்
வழிந்தோடியது;
நீ என்னோடு இருக்கும்போது
கண்ணீர் வடிவது விசித்திரமான ஒன்று தான்;
அது ஒரு வேலை உன் கை
விரல் தீண்டுவதற்கு என்
கண்கள் செய்த மாயமாக கூட
இருக்கலாம்...
நீயும் துடைத்து எனக்கு
துணையாக உன் முத்தத்தையும்
கொடுத்துச் சென்றாய் அன்று..

குறுஞ்செய்தியில் கூட
என் இதழ்களையே
குறி வைத்து அனுப்புகிறாயே
உன் முத்தத்தை...

சொட்டுச் சொட்டாக
மருந்துகள் இட்டேன்
என் கண்ணில்;
கண்ணே! நீ இருந்தால்
உன் ஒரு சொட்டு
முத்தம் போதாத? என்ன...

October 8, 2014

முதலில்

கள்வனே!
இறுதியாக நான் போகும்
இடம் கல்லறை என்றாலும்
இப்போதே போக விருப்பமடா!
நீ  என்னோடு இல்லாத
ஒரே காரணத்தால்...

உன் சிரிப்பைப் பார்த்து
ரசித்தவள் நான்,
இப்போதெல்லாம் தானே
சிரிக்கிறேன் வெட்கத்தை விட்டு...

கள்வா!!
நீ ஒன்றும் சொல்லாத
போதும் உன் கண்கள்
ரசித்த உடையையே உடுத்திக்
கொள்கிறேன் என் வீட்டின்
படுக்கை அறையில்...

நீ ரசிப்பதற்காகவே
கலைகள் மிகுந்த
உடையை உடுத்திக்
கொள்கிறேன் - பின்
நீ ருசிப்பதற்காகவே
கலைக்கிறேன்...

நீ வாங்கி வரும்
புதுப்புடைவையை உன்னோடு
சேர்த்தே உடுத்திக்
கொள்ள வேண்டுமடா!!
உன்னோடு உணவு
உட்கொள்வதிலே அதிக
விருப்பமடா!! அதிலும்
இதழ் வழி என்றால்
இன்னும் அதிகமாக!!!!
வார இறுதி நாட்களில்,
இப்போதெல்லாம் எனக்காகவே வெட்டி விடுகிறேன்
உன் விரல் நகங்களை..
அமாவாசை அன்று கூட
நம் வீட்டு ஜன்னல் பக்கம்
நிலா உலா வர ஆசையாம்
நீயும் நானும் இருந்த கோலத்தை ரசித்த பிறகு...
என் சமையல் அறையும்,
உன் அலுவலக அறையும்,
ஒன்று தான் - நான் உன்னை
நினைத்துக் கொள்வேன்,
நீ என்னை நினைத்துக்
கொள்வாய்..நினைவுகள்
நம் மார்பை அனைத்துக்
கொள்ளும்....
அலுவலகம் முடிந்து
தாமதமாகவே நீ வந்தாலும்
சீக்கீரம் ஆரம்பித்து விட
வேண்டுமடா! உனக்கும்
எனக்குமான வேலைகள்
நம் வீட்டினுள்....
என் மார்பில்
பச்சை குத்திக் கொள்ள
எனக்கும் ஆசை தான்!
உன் இதழால்,
உன் இதழாக...