July 16, 2015

2015 கவிதைகள் 1031 to 1040

தெளிவற்ற
என் மனதில்
தெளிவான நீரோடை நீ
உன்னுள் மூழ்கி
என் தனிமையை
தனித்துக் கொள்கிறேன்....  1031

நீருக்குள் மூழ்கிய
நிலம் போல
எனக்குள்
உன் காதல்.......        1032

வாழ்வை நினைத்து
வாடவில்லை
வானவில் போல
எப்போதும்
என்னுள் நீ
ஒளி வீசுவதால்....    1033

ஏன் இந்த
துயரம் என்பதை விட
துயரத்திலும்
உன் துணை இல்லாதது
தான்
எனக்கு வருத்தம்....   1034

சூரியனே
காலையில்
கிழக்கு நோக்கியே
என் புடவை
மாற்றுகிறேன்
புன்னகை புரிந்த படி
நீ ரசிப்பதற்காக....     1035

உன்னைக் காணாது
நான் இருக்கும்
விரதத்தின்
முடிவில்
என்னைக் கண்டு
உன் கண்களாலே
என் விரதத்தின்
பலனை
எனக்கு நீ கொடுப்பாய்!!  1036

பனி சூழும்
இந்த கடற்கரையில்
கடலின் இரவை ரசித்து
உன் கரம் தொட்டு
நானும் இசைக்க
வேண்டும்
கடலின் கீதத்தை விட
அழகான
ஒரு கீதத்தை....      1037

திமிங்கிலத்தை விட
திமிராய்
நான் துள்ளி குதித் தாட
கடலாக நீ
எப்போதும் வேண்டும்
எனக்கு!!!             1038

தண்ணீரில்
மட்டுமே வாழும்
மீனைப் போல
உன்னிலும்
உன் காதலிலும்
வாழ்கிறேன் நான்....   1039

தண்ணீர்
பெருக பெருக
நிறையும் குடம் போல
உன் காதல்
பெருக பெருக
நிறைகிறது
என் மனமும்
என் கனவும்....          1040

No comments:

Post a Comment