December 31, 2013
அன்பு தம்பி
December 29, 2013
Surendhar
நான் நன்கு
பழகிய குணம்.
என்னைச் சார்ந்த ஜனங்களிலும்
இவன் தான் 1.
உன்னை அறிவை நீ
உண்ர்ந்து கொள்
என்று இவன் எனக்கு
சொல்லாமல் சொல்லி
கொடுத்த நண்பன்.
வகுப்பின் முதல் இடமும்
இவன் தான்.
முதல்வன் தகுதியை
இழந்தவன் என்று அவனே
பெருமையாக சொல்லிக்
கொள்ளும் குணம்
கொண்டவன்.
கல்லூரியில் யாருமே
கேட்பதில்லை.
கைப்பேசியை கைவிரல்
பிடித்துக் கொள்கிறான்.
என்பது இவன் தனித்திறமை.
சோதனைகளை கடந்தவன்
இந்த இளம் வயதில்.
கடந்து வந்த நாட்களையும்,
அவ்வப்போது எண்ணி
கண்ணீர் விடுவான்.
உருண்டை சோறு
ஒன்றாக உண்டு
மகிழ்ந்து இருக்கிறோம்.
மிகப்பெரிய போன
பண்புகள் என இவனுள்
ஆயிரம்.
இருக்கிறோம்.
ஒன்றாக விளையாடி
இருக்கிறோம்.
ஒன்றாக படித்து
இருக்கிறோம்.
நினைத்துப் பார்த்தால்
நினைவின் ஒரு பகுதியில்
சாரல் வீசுகிறது.
முறை அறிமுகம் செய்து
என்னையும் நண்பனாக
ஏற்றுக் கொண்டவன்...
29-12-2013
December 28, 2013
மழை
அடைமழையில் உன்னை
அனைத்துக் கொள்ள
வேண்டும்;
குடைக்குள்
உன்னோடு குளிர்
காய வேண்டும்
குடையோ
மழையில் குளிக்க
என் இடையோ
உன் முத்தத்தில்
தவிக்க;
நீ
மூடி மறைத்தாய்
உன் பொன் இதழையும்;
மழை குறைய குறைய,
ஏனோ என் முத்தம்
பெருகுகிறது...
என் முத்த மழைக்கு
உன் இதழ் மட்டும்
போதுமா? என்ன
வண்ண குடையாக...
December 26, 2013
தனிமை
பார்த்துப் படிப்பதும்
உன் திறமை.
நீயும் இருப்பாய்,
நம் அன்னையும் இருப்பாள்.
போல வாழ்க்கையில்
தினம் எழுந்தாலும்,
நன்பகல் வெயிலில்
வண்ணப் பூ போல
போரிட வேண்டியுள்ளது
இந்த தனிமைக்
காலத்தில்.
கதிரவனும் சாயவில்லை,
குளிர்க் காற்றும் வீசவில்லை,
மண்வாசனையும் எழவில்லை,
ஆனாலும் மழை பொழிகிறது -
ஆம் என்னவளின் கண்ணில்
கண்ணீர் மழை!!!
கார்மேகமோ??
மூடும் போது வெளிச்சம்
மங்கும் விழியென்ன
கதிரவனோ??
மூச்சுக் காற்றும் முடிவு
தெரியாமல் திணறுகிறதோ??
முகத்தை மூடியபடி
ஒரு கண்ணீரும்
வழிகிறதோ??
அடிக்கும் இந்நேரம் கூட
ஒர் இன்னல் தனிமையை
எண்ணி!!!
தோள் கொடுப்பது
இந்த கண்ணீர் துளிகள்
மட்டும் தான்.
வேதனை கொள்வதா?
கோபம் கொள்வதா?
நான் வருத்திக் கொள்வதா?
உண்ண முயற்சித்தேன்;
சிந்தினேன்.
நீ என்பேன்.
இன்று நாளும் பிறக்கிறேன்
உன் குழந்தையாக;
நீ அமர்ந்த படியில்
அமர்ந்து கொள்கிறேன்!!
என்னை அனைத்து கொள்!!
சாய்த்துக் கொள்;
உன் பொன் சிரிப்பால்
ஏற்றுக் கொள்;
கண் கலங்காமல் பார்த்துக் கொள்;
தயங்காமல் என்னை மன்னித்துக் கொள்;
இல்லையோ?
உன்னோடு தனிமையில் இருக்க நினைக்கிறாயோ??
எனக்காக துடிக்க;
என்னோடு தனிமையில் பயனிக்க;
ஐம்புலனால் சேர்த்துக் கொள்வான்;
இரவாகிய உன்னையும்
கொல்வான்.
கொடியவனும் இல்லை;
என் இதயத்தை
வென்றவனும் இல்லை;
வேதனைகளை பல நான்
சுமந்தாலும் என் அருகே
எனக்கும் தெரியாமல்
நிற்பவன் அவன்;
என்னைவிட என்னை
அதிகம் ரசித்தவன் இவன்;
இயல்பான வாழ்க்கையில்
இன்னும் உயிர் வாழும்
ஒரு சராசரி மனிதன் தான் இவன்.
கண்விழித்தபடி;
கைகள் இரண்டையும்
கட்டியபடி;
சூரியனை பார்த்தபடி;
என்று? கண் மூடுவோம் என்று!!
26-12-2013 23.37 PM
December 19, 2013
காதலே!!
வர்னித்தால் நீ
கோபம் கொள்வாய்!!
பற்றி வர்னிக்காமல்
நான் கவிதை எழுதினால்
அது கவிதையே இல்லை.
மிகப்பெரிய தொல்லை,
உயிரே! என்றால் நீ உயிரையே
விட்டுவிடுவாய்!!
கவிதையே! என்றால் நீ
என்னை காதலித்தும்
விடுவாய்!!
இதயமே! என்றால் இதழால்
பொழிவாய்!!
மொழியே! என்றால் மொய்த்து
விடுவாய்!!
முத்தமே!! என்றால் அய்யோ!!
மொத்தம் போச்சு!!
உன்னைப் பற்றி கவிதை
எழுதுவது??
December 8, 2013
நம் கவிதைகள்
இருந்து பிறந்த நீயோ -
உன் அன்பின் கருவறையில்
அடைத்து விட்டாய் என்னை
மட்டும்.
மடியில் தவழ்ந்த நீயோ -
இன்று தவிக்கிறாய் என் மடி
இல்லாமல்..
எண்ணுகிறது என் விழிகள்.
என் உயிரே; தேடுகிறது
நம் காதல் இனையும் நாளை.
உன்னோடு மட்டும் இருப்பதால்.
என் உயிர் பிரிய வேண்டும்
என்பதால் என் உயிரையும்
கையில் பிடித்து அலைகிறேன்.
நீ முத்தமிட்ட சுத்தமான காற்று
அதனால் என்னவோ
இன்று வரை உயிர் வாழ்கிறேன்.
கடற்கரை
நான் பார்த்தேன்;
கடலுக்கு அப்பால்
என்ன இருக்கும் என்று.
என்னை அழைத்தாய்
நீ என்ன? என்று.
ஒன்றும் இல்லை என்றேன்.
இருவரும் பேசினோம்.
மென்மையான உன் விழிகளில்
எத்தனை அழகு!!
கடலுக்குள் இருக்கும்
முத்தை நான் பார்த்தது
இல்லை.
ஆனால் உன்னில்
இருக்கும் முகத்தையும்
அகத்தையும் எத்தனை
முறை பார்த்தாலும்
அழகு தான்!
அறிவுரைகள் பல சொன்னாய்
நீ!!
அது அத்தனையும் கரைந்து
கொண்டே இருந்தது.
என் பார்வைகள்
மெல்ல மெல்ல கூட
உன்னில் இருந்து
பேச்சுக்கள் குறைந்து
கொண்டே போக,
மெளனத்தில் கலந்தது
நம் காதல் அந்த கரையில்.
காற்று மெல்ல தீண்ட
மேனியெங்கும் ஒரு
சிலுசிலுர்ப்பு.
காதுகளுக்கு மேலே மூடியை
மெல்ல வருடியபடி என்னை
நீ பார்க்க;
புதிதாய் நான் உன்னை
பார்க்க;
கிளம்பலமா? என்றாய் நீ.
நான் மறுபடியும் கரையில்
எழுந்து நின்றபடி கடலை
பார்த்தேன்;
கடலுக்கு அப்பால்
என்ன இருக்கும் என்று.
08-12-2013 19.00 PM
December 6, 2013
மல்லிகை
என்னிடம் நீ கேட்டாய்;
உன்னோடு நான்
இருக்கும்போது
நீயே ஒரு கவிதை.
முதல் வரி உன்
முகம்.
மெருகு ஏறிட எத்தனை
இதமான வரிகளடி
உன் இதழ் ரேகையில்.
மெய் தானே?
ஆனால் என்னில்
மேய்வது எத்தகைய
மோகம் தனை.
பிறப்பால்
என்னில் இருந்து
பிரித்து விட்டாய்
நான் முதலில்
பார்த்த என்னை.
எழுதிக் கொள்ள
காகிதம் இல்லை
காரணம் அறியா
ஒரு தவிப்பு!!
கண்ணீரில் என்று
பூக்கும் இந்த காதல் பூ!
நினைத்ததில்லை,
வாழ வழியையும்
ஏற்க கூடியது இல்லை.
பார்வையில் பரிதவிக்கும்
மனதால் ஒரு சேர
ஏங்கித் தவிக்கும்.
வழங்கிய கனவுகளை
என் படுக்கை அறை
என்று உன்னோடு
கலக்கும்.
நீ சூடாமல் என்னில்
பதிந்தால்,
நானே மல்லிகைப்
போல் தான் மனப்பேன்.
சிரிப்பதோ!! உன் மனம்
ரசிப்பதோ!! என் இதழ்..
06-12-2013 22.51 PM
சிங்கத்தின் குகை - ஒரு நாள்
அவன் தனிமையில் அந்த தெரு முனைக் கடையில் ஆழ்ந்த சிந்தனையுடன் புகைபிடித்த படி தன் கண்ணாடி வழியாக தன் காலிற்க்கு கீழே தெரியும் தரையை உற்று நோக்கி யோசித்து கொண்டு இருந்தான். அநேகமாக அடுத்து என்ன வேலை என்று கூட எண்ணிக் கொண்டு இருக்கலாம். புகை கூட கூட கையில் இருக்கும் சிகரெட் துண்டு எரிந்து தன் உடலை சுருக்கிக் கொண்டே இருந்தது. அவன் சிகரெட் துண்டில் இருந்து பிறந்த புகை மூட்டம் கூட கூட மேக மூட்டம் போல காட்சியளிக்க, மழை வந்துவிடுமோ? என்று எண்ணிய படி, தன் காலில் போட்டு நசுக்கியபடி, ஒரு சில நேரம் எச்சில் முழுங்கியபடி கிளம்பினான். எங்கே போகிறோம் என்று யோசித்து யோசித்து ஒரு வழியாக தன் வேலை செய்யும் இடத்திற்கு வந்தடைந்தான்.
"தும் க்யா கர் ரஹீ ஹோ?
என்று அவன் கேட்டான்.
"சார், நல் மேம் பானீ நஹீம் ஆதா."
என்றான் அந்த ஹிந்தி கார வேலை ஆள்.
"தோ கியா? பால்டீ மேம் பானீ ரக்கா ஹை".
என்றபடி வேலையாட்களை, வேலை எய்தபடி எண்ணிக் கொண்டு இருந்தான். இன்று தான் அந்த ஆங்கிலப் படம் வெளியாகிறதோ என்று. ஆம் அந்தப் படத்தின் பெயர் " Small Tiger". போக வேண்டும் என்ற எண்ணங்களும், விருப்பங்களும் இல்லை. ஆனாலும் ஒரு ஈர்ப்பு அந்தப் படத்தின் மீது. ஈவினிங் சோவிற்க்கு டிக்கெட் இருக்கிறதா? என்று மதியம் 3 மணி அளவில் தியேட்டர் பக்கம் போனான் அவன். அந்த இனிய நாளின் ஒரு அதிர்ஷ்டம் அவனுக்கு மிகச் சிறப்பாக கிடைத்தது. அது தான் அந்தப்படத்தின் லட்சுமிகரமான அந்த நடிகை அங்கே வந்திருப்பதை, பாரதி Style - ல சொல்லனும் -னா " இன்பத் தேன் வந்து பாயுதே காதினிலே" என்று அவன் அறிந்தான். அரை குறை மனது இல்லை இப்போது. மிக திடமான, திண்மமான ஒரு மனிதனாக அவன் உள்ளே சென்றான்.
அவளையும் பார்த்துவிட்டு, படம் பார்க்க ஆரம்பித்தான் அவன்.
"Small Tiger" படத்தின் ஓட்டம், நமது சிங்கத்தின் கர்ஜனையில், இன்னும் சொல்லப் போனால், வெறிகொண்டு, இன்னும் சொல்லப் போனால், வெகு கொண்டு, இன்னும் சொல்லப் போனால், கோபத்தில் பொங்கி எழுந்து, டிக்கெட் கிழித்துக் கொடுத்தவனிடமே டிக்கெட்டை கிழித்து எறிந்து கிளம்பியது தான் அன்றைய சிறப்பு அம்சம்.
வெளியேறிய அவன் மனம் வருந்தவில்லை, போனில் பைசாவும் அவ்வளவாக இல்லை, இருந்தாலும் இருக்கின்ற பைசா காலியாகும் வரை, அதாவது நாயகன் பானியில் " நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா" எதுவும்மே தப்பு இல்லை போன் செய்து புலம்பி தீர்த்த அருமையான அந்த ஒரு நாள். சிங்கத்தின் வாழ்வில் ஒரு முக்கியமான நாள்.
-SunMuga-
06-12-2013 22.33 PM
December 3, 2013
சோழ பரம்பரையில் ஒரு MLA
என்ன டா இது தலைப்புன்னு யோசிக்கிறேங்களா? இது என் கூட வேலை பார்க்கிற Mr. நாகராஜன் பற்றிய ஒரு அனுபவ பதிவு. அவரை பற்றி எழுதுவதற்கு எனக்கு முழுத் தகுதி இருக்குன்னு நம்புகிறேன். இவர் ஒரு கட்டட கலை நிபுணர். ஆனாலும் கண்ணாடி இல்லாம எந்த ஒரு வேலையும் செய்யமாட்டார். இவர் தகுதிக்கு தாஜ்மஹால் தரம் எப்படி இருக்குன்னு ஆராய்ச்சி பண்ண கூப்ட அப்ப கூட என்னோட நண்பர்கள் தான் முக்கியம்ன்னு இங்க எங்களோட குப்பை கொட்டுறாரு. மிக திறமையான ஒரு கலைஞர். வேலைன்னு யார் சொன்னாலும் எந்த கம்பெனி, என்ன வேலைன்னு கூட கேட்காமல் இண்டர்வியூ அட்டன் பண்ணுவார். வழக்கம்போல ஒரு பல்பூம் வாங்கிட்டு போய்விடுவார். இப்ப தான் கொஞ்சம் படிக்க ட்ரை பன்னுறாரு. நீங்க நினைக்கலாம் என்ன டா? இவ்வளவு வயசுக்கு அப்புறம் அப்படின்னு. படிப்புக்கு எப்பவுமே வயசு இல்லை அப்படின்னு இந்த உலகத்துக்கு ஏதோ ஒரு தத்துவத்தை எடுத்து சொல்லத் தான் இந்த முடிவுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.
நான் இப்போது எல்லாம் எந்தவொரு படம் பார்க்க முடிவு செய்யும் முன் இவரிடம் தான் படத்தோட ரிசல்ட் எப்படின்னு கேட்டு தெரிஞ்சுக்கிறேன். இவர் நல்லா இல்லன்னு சொல்ற படத்தை மிஸ் பண்ணவே மாட்டேன்.
இவரோட திறமைக்கு எங்க ஊர்ல MLA போஸ்ட் க்கு கூட இவர் நிக்கலாம். ஆனால் ஊரோட நன்மைக்காக இப்போதைக்கு வேண்டாம்ன்னு எங்க சங்கம் முடிவு பன்னிருக்கு.
-SunMuga-
03-12-2013 22.14 PM
December 2, 2013
PKN Hr. Sec. School -Tirumangalam
02-12-2013 23.01 PM
December 1, 2013
அவனும்-பெண்ணும்
அவன் தன் வீட்டில் ஒழிந்து கொண்டு இருந்தான். அவன் பெண் குழந்தை தேடுகிறாள். அப்பா!! எங்கப்பா இருக்க. அப்பா! என்றபடி கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்க்கிறாள். அப்பா! என்றபடி கதவின் இடுக்கில் தேடுகிறாள்! அப்பா என்றபடி சமையல் அறையில் தேடுகிறாள். அப்பா! என்றபடி அம்மா!! அப்பாவ எங்கமா? என்று கேட்கிறாள். நீயே கண்டுபிடிடா செல்லம்!! என்றாள் அவள். அம்மா!! நான் ரெம்ப சின்ன பொண்ணுமா நீயே சொல்லி கொடு என்றாள். அதெல்லாம் சொல்ல முடியாது, நீ தான் கண்டுபிடிக்கனும் என்றாள் அவள். மறுபடியும் அப்பா!! நீ எங்க தான் இருக்க... என்றபடி உரக்க கத்தினாள். ப்ளீஸ்-பா குட்டி பாவம்-பா வா!! என்றாள். அவன் சிரித்தபடி அந்த புளு கலர் பிரிட்ஜ் க்கு பின்னால் இருந்து வெளியே வந்தான். அந்த பெண் இப்பொழுது சிரித்தபடி எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தியா!! என்றதும் அவளின் அம்மா குலுங்க குலுங்க சிரித்தாள்...
-SunMuga-
01-12-2013 21.33 PM
அரக்கோணம்
01-12-2013 21.42 PM