December 2, 2013

PKN Hr. Sec. School -Tirumangalam

முதல் முறை என் பெற்றோரை விட்டு 10 நாள் Camp சென்றேன். நான் அப்பொழுது 8ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். என் வாழ்க்கையில் நான் மிகக் கொடிய நாட்களாக என்னும் நாட்களில் இந்த 10 நாளுக்கும் இடம் இருக்கும். பள்ளியில் படிக்கும் போது அவ்வளவு தூரம் விவரம் இல்லை என்றே இப்போது நினைத்தால் தோன்றுகிறது. நான் அந்த Campல் இருக்கும் போது எத்தனை விசயங்கள் நான் கண்டேன். நான் நண்பனாக நினைத்து பழகியவன் சற்று என்னை விட்டு பிரிந்து போனதாக நினைவு. அந்த Camp தான் நானும் அவனும் இறுதியாக சந்தித்தது, இது நாள் வரை அவன் என் கண்களில் படவில்லை. இன்னுமொரு கொடுமையான சம்பவம் அந்த நாட்களில் தான் நடைபெற்றது. ஆம் என் அண்ணனுக்கு விபத்து நேரிட்டது. ஓரமாக ரோட்டில் நடந்து சென்றவனை ஒரு வேன் காரன் அடித்துவிட்டு போய்விட்டான். என் அண்ணனுக்கு அப்பொழுது தலையில் காயம். இது எனக்கு நான் Campல் இருக்கும் வரை தெரியாது. என் பெற்றோர் அப்பொழுது கண்ட, பெற்ற துயரம் எண்ணில் அடங்காதவை. என் நினைவை விட்டு நீங்க மறுக்கும் சம்பவம் அது. நான் அவர்கள் மீது கோபம் கொள்ளவில்லை ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று. ஆனால் அவர்கள் எவ்வளவு தூரம் அந்த சிரத்தையை அனுபவித்து இருப்பார்கள் என்று எண்ணி எண்ணி வருத்தம் தான் மிஞ்சியது. நான் அன்று தான் வீட்டிற்கு வந்தேன் Camp முடித்து. யாரும் என்னிடம் அவ்வளவு சகஜமாக பேசிக் கொள்ளவில்லை. யாரோ ஒருவர் வந்து இப்ப எப்படி இருக்கான் அப்படின்னு என் அம்மாவிடம் கேட்டதாக நினைவு. "ம்ம்ம்" இப்ப ஒன்னும் பிரச்சினை இல்லை. அப்படி அம்மா சொன்னதும் தான் கேட்டேன். என்ன ஆச்சுன்னு.. அப்பொழுது தான் என்னிடம் காட்டினார்கள் ஸ்கேன் , பேப்பர் நியூஸ் எல்லாம். ஒரு நிமிடம் என்ன சொல்ல, செய்வதென்றே தெரியாமல் படித்து பார்த்தேன் அந்த பேப்பர் நியூஸை. மறுநொடி அமைதியாக இப்ப எப்படி இருக்கு என்று என் அண்ணனின் தலையின் பின்புறம் பார்த்தேன். பரவாயில்லை என்று என்னை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான் அவன். நான் ஏன் அந்த Camp கிற்கு சென்றிருக்க வேண்டும். இப்பொழுதும் அந்த School லை கடந்த செல்லும்போது ஒரு கசப்பான சம்பவம் கண்ணுக்குள் கசிந்து கொண்டே இருக்கிறது.
-SunMuga-
02-12-2013 23.01 PM

No comments:

Post a Comment