கரையில் நின்றபடி
நான் பார்த்தேன்;
கடலுக்கு அப்பால்
என்ன இருக்கும் என்று.
நான் பார்த்தேன்;
கடலுக்கு அப்பால்
என்ன இருக்கும் என்று.
என் முதுகை தட்டியபடி
என்னை அழைத்தாய்
நீ என்ன? என்று.
என்னை அழைத்தாய்
நீ என்ன? என்று.
புன்னகை புரிந்தபடி
ஒன்றும் இல்லை என்றேன்.
ஒன்றும் இல்லை என்றேன்.
கரையில் அமர்ந்து
இருவரும் பேசினோம்.
மென்மையான உன் விழிகளில்
எத்தனை அழகு!!
இருவரும் பேசினோம்.
மென்மையான உன் விழிகளில்
எத்தனை அழகு!!
கடலுக்குள் இருக்கும்
முத்தை நான் பார்த்தது
இல்லை.
ஆனால் உன்னில்
இருக்கும் முகத்தையும்
அகத்தையும் எத்தனை
முறை பார்த்தாலும்
அழகு தான்!
அறிவுரைகள் பல சொன்னாய்
நீ!!
அது அத்தனையும் கரைந்து
கொண்டே இருந்தது.
என் பார்வைகள்
மெல்ல மெல்ல கூட
உன்னில் இருந்து
பேச்சுக்கள் குறைந்து
கொண்டே போக,
மெளனத்தில் கலந்தது
நம் காதல் அந்த கரையில்.
காற்று மெல்ல தீண்ட
மேனியெங்கும் ஒரு
சிலுசிலுர்ப்பு.
காதுகளுக்கு மேலே மூடியை
மெல்ல வருடியபடி என்னை
நீ பார்க்க;
புதிதாய் நான் உன்னை
பார்க்க;
கிளம்பலமா? என்றாய் நீ.
நான் மறுபடியும் கரையில்
எழுந்து நின்றபடி கடலை
பார்த்தேன்;
கடலுக்கு அப்பால்
என்ன இருக்கும் என்று.
-Sun Muga-
08-12-2013 19.00 PM
08-12-2013 19.00 PM
No comments:
Post a Comment