December 1, 2013

அரக்கோணம்

அரக்கோணம் நான் வேலை நிமித்தமாக அங்கே வாழ வேண்டிய சூழ்நிலை. சுதந்திரம் நிறைந்த ஒரு அறை. அறையில் அற்புதமான நண்பர்கள். மிக அமைதியான ஒரு வாழ்க்கை. காலை 7.30க்கு எழுந்தாலும் போதும் வேலைக்கு போக. இப்படியே 4 வருடம் கழிந்துவிட்டது. எனக்கு அங்கு கிடைத்த நண்பர்களில் வேலு மிக முக்கியமான ஒரு நண்பன். நண்பன் என்றால் ஒரு சுயநலம் இல்லாத என்று அர்த்தம். அந்த விதத்தில் அவனும் எந்தவொரு சுயநலத்தோடு யாரோடும் பழகி நான் கண்டதில்லை. நல்ல நண்பன். அவனால் இதுநாள் வரை எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. என்னால் வேண்டுமானால் அவன் என்றாவது கஷ்டப்பட்டு இருப்பான். ஆனால் நான் பட்டதில்லை. உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவும் மனப்பான்மை கொண்டவன். வேலையில் அதிக ஈடுபாடு கொண்டவன். எனக்கு பிடித்த படங்கள் பெரும்பாலும் அவனும் ரசித்து பார்த்து இருப்பான். நான் அவனோடு பார்த்த படங்களிலேயே மிக ரசித்து பார்த்த படம் என்றால் அது 3 மட்டுமே. அரக்கோணத்தில் அவனும் ஒரு நல்ல நண்பன்.
-SunMuga-
01-12-2013 21.42 PM

No comments:

Post a Comment