December 29, 2013

Surendhar

அழகிய முகம்,
நான் நன்கு
பழகிய குணம்.

பிறந்ததும் ஜனவரி 1
என்னைச் சார்ந்த ஜனங்களிலும்
இவன் தான் 1
.

அரியனவை தெரிந்து கொள்.
உன்னை அறிவை நீ
உண்ர்ந்து கொள்
என்று இவன் எனக்கு
சொல்லாமல் சொல்லி
கொடுத்த நண்பன்.

கல்லூரியில் முதல் நண்பன்.
வகுப்பின் முதல் இடமும்
இவன் தான்.

ஒரு ஓட்டு வித்தியாசத்தில்
முதல்வன் தகுதியை
இழந்தவன் என்று அவனே
பெருமையாக சொல்லிக்
கொள்ளும் குணம்
கொண்டவன்.

இவன் யார்? என்று
கல்லூரியில் யாருமே
கேட்பதில்லை.

கணினியை காதலித்தாலும்
கைப்பேசியை கைவிரல்
பிடித்துக் கொள்கிறான்.

எதிலும் இளமை கூடி இருக்கும்
என்பது இவன் தனித்திறமை.

வாழ்க்கையில் பல
சோதனைகளை கடந்தவன்
இந்த இளம் வயதில்.

கடந்த நாட்களையும்,
கடந்து வந்த நாட்களையும்,
அவ்வப்போது எண்ணி
கண்ணீர் விடுவான்.

தாயின் கையினால்
உருண்டை சோறு
ஒன்றாக உண்டு
மகிழ்ந்து இருக்கிறோம்.

பெருகிப் போன அன்பு
மிகப்பெரிய போன
பண்புகள் என இவனுள்
ஆயிரம்.

ஒன்றாக உறங்கி
இருக்கிறோம்.
ஒன்றாக விளையாடி
இருக்கிறோம்.
ஒன்றாக படித்து
இருக்கிறோம்.

அது அத்தனையும் இன்று
நினைத்துப் பார்த்தால்
நினைவின் ஒரு பகுதியில்
சாரல் வீசுகிறது.

என்னை எனக்கே பல
முறை அறிமுகம் செய்து
என்னையும் நண்பனாக
ஏற்றுக் கொண்டவன்...

-Sun Muga-
29-12-2013

No comments:

Post a Comment