அன்பு சுந்தரிக்கு....
தோழியே!!!
நீ தான் என் முதல்
பெண் தோழி!!
என் கண்ணில் கவர்ந்த
பலருக்கு மத்தியில்
நீ மட்டும் ஒரு
பெண் தோழி!!
தொழில்நுட்ப கல்லூரியால்
தோழியாய் ஆனாய்,
தோழமை கொண்டாய்..
உடல் மொழியில் நீ
ஒரு பெண்,
உயிர் மொழியில் நீ
ஒரு ஆண் எனக்கு!!
பகிராத உணர்வுகள்
இல்லை,
உன்னோடு உணவு
உண்டதும் ஒரு ஞாபகம்!!
தோழி நீ!!
தோள் சாய முடியாத
தோழி நீ!!
நட்பு என்ற மாயம்
உன்னை சூழ,
நானும் அதில்
உன்னை சேர,
நித்தம் சிரிக்கிறேன்
அதன் நினைவுகளால்.
உன் பெண்மையை
உணராமல் நீ
என்னிடம் பழகுகிறாய்!!
அதனால் என்னவோ
நானும் பெண்ணாக உரு
மாறுகிறேன் உன்னிடம்..
உருமாறி உருகி உருகி
உன்னிடம் பேசியது
இல்லை,
ஒரு வார்த்தை பேசுவது
என்பதே மிக அரிது..
நீங்காத நினைவுகள்
உன்னை நினைவு படுத்தும்.
நீ மட்டும் எனக்கான
பெண் தோழி!!
என் விழியின் மொழியை
அதிகம் உணர்ந்தவள் நீ!!
உண்மையில் உன்னிடம்
பேசும் போது உண்மை
கூடி இருக்கும்.
உன்னதமான உறவு தான்..
உரிமையோடு நீ பழகி,
இன்று உயிரோடு
கலந்து இருக்கிறாய்!!
உன்னை அதிகம்
கிண்டல் செய்து
இருப்பேன்,
உனக்கு மட்டுமே
புரிந்தபடி,
அதுதான் நம் நட்பின்
முதற்படி..
பரிட்சையின் போது
பதட்டத்தோடு நான்
இருக்க,
சிரித்தபடி all the best
நீ சொல்ல,
நானும் சிரித்து இருக்கிறேன்..
(எனக்கு அல்ல,
உன் அருகே யார்
இருக்கிறார்களோ
அவர்களுக்கு..)
நானும் கவலை
கொண்டேன்,
பெண்ணாக பிறக்கவில்லையே
என்று உன்
தோழமை கிடைத்தபிறகு.
கஷ்டங்களை பல
கடந்திருந்தாலும்
இஷ்டம் போல்
உரையாடிய அந்த
நாட்களை மீண்டும்
ஒரு முறை
எண்ணிப்பார்க்கிறேன்..
இன்று உனக்கு பிறந்த நாள். உனக்காக நான் ஏதூம் இதுவரை
பரிசாக அளித்தது இல்லை. முதல் முறை அளிக்கிறேன் இந்த கவிதை பரிசை. ஆயிரம் வரிகள் எழுதி இருப்பேன் முதல் முறை உன் நட்பை பற்றி எழுதும்போது ஒரு சிறு சந்தோஷம்.
உனக்கும் எனக்குமான ஒரு சிநேகிதம் பற்றி சொல்லனும்னா, ஒரு சின்ன உதாரணம் இருக்கு. படிக்கும் போது Class-ல First Mark நீ தான் எடுப்ப, ஆனா இது வரைக்கும் படிப்பு சம்பந்தமான எந்த ஒரு சந்தேகமும் கேட்டு உன் கிட்ட பேசுனதா சரித்திரம் இல்ல. அந்த அளவுக்கு அளவுக்கதிகமான ஒரு சிநேகிதம்.
-Sun Muga-
09-07-2013 02.00 AM
தோழியே!!!
நீ தான் என் முதல்
பெண் தோழி!!
என் கண்ணில் கவர்ந்த
பலருக்கு மத்தியில்
நீ மட்டும் ஒரு
பெண் தோழி!!
தொழில்நுட்ப கல்லூரியால்
தோழியாய் ஆனாய்,
தோழமை கொண்டாய்..
உடல் மொழியில் நீ
ஒரு பெண்,
உயிர் மொழியில் நீ
ஒரு ஆண் எனக்கு!!
பகிராத உணர்வுகள்
இல்லை,
உன்னோடு உணவு
உண்டதும் ஒரு ஞாபகம்!!
தோழி நீ!!
தோள் சாய முடியாத
தோழி நீ!!
நட்பு என்ற மாயம்
உன்னை சூழ,
நானும் அதில்
உன்னை சேர,
நித்தம் சிரிக்கிறேன்
அதன் நினைவுகளால்.
உன் பெண்மையை
உணராமல் நீ
என்னிடம் பழகுகிறாய்!!
அதனால் என்னவோ
நானும் பெண்ணாக உரு
மாறுகிறேன் உன்னிடம்..
உருமாறி உருகி உருகி
உன்னிடம் பேசியது
இல்லை,
ஒரு வார்த்தை பேசுவது
என்பதே மிக அரிது..
நீங்காத நினைவுகள்
உன்னை நினைவு படுத்தும்.
நீ மட்டும் எனக்கான
பெண் தோழி!!
என் விழியின் மொழியை
அதிகம் உணர்ந்தவள் நீ!!
உண்மையில் உன்னிடம்
பேசும் போது உண்மை
கூடி இருக்கும்.
உன்னதமான உறவு தான்..
உரிமையோடு நீ பழகி,
இன்று உயிரோடு
கலந்து இருக்கிறாய்!!
உன்னை அதிகம்
கிண்டல் செய்து
இருப்பேன்,
உனக்கு மட்டுமே
புரிந்தபடி,
அதுதான் நம் நட்பின்
முதற்படி..
பரிட்சையின் போது
பதட்டத்தோடு நான்
இருக்க,
சிரித்தபடி all the best
நீ சொல்ல,
நானும் சிரித்து இருக்கிறேன்..
(எனக்கு அல்ல,
உன் அருகே யார்
இருக்கிறார்களோ
அவர்களுக்கு..)
நானும் கவலை
கொண்டேன்,
பெண்ணாக பிறக்கவில்லையே
என்று உன்
தோழமை கிடைத்தபிறகு.
கஷ்டங்களை பல
கடந்திருந்தாலும்
இஷ்டம் போல்
உரையாடிய அந்த
நாட்களை மீண்டும்
ஒரு முறை
எண்ணிப்பார்க்கிறேன்..
இன்று உனக்கு பிறந்த நாள். உனக்காக நான் ஏதூம் இதுவரை
பரிசாக அளித்தது இல்லை. முதல் முறை அளிக்கிறேன் இந்த கவிதை பரிசை. ஆயிரம் வரிகள் எழுதி இருப்பேன் முதல் முறை உன் நட்பை பற்றி எழுதும்போது ஒரு சிறு சந்தோஷம்.
உனக்கும் எனக்குமான ஒரு சிநேகிதம் பற்றி சொல்லனும்னா, ஒரு சின்ன உதாரணம் இருக்கு. படிக்கும் போது Class-ல First Mark நீ தான் எடுப்ப, ஆனா இது வரைக்கும் படிப்பு சம்பந்தமான எந்த ஒரு சந்தேகமும் கேட்டு உன் கிட்ட பேசுனதா சரித்திரம் இல்ல. அந்த அளவுக்கு அளவுக்கதிகமான ஒரு சிநேகிதம்.
-Sun Muga-
09-07-2013 02.00 AM
No comments:
Post a Comment