July 28, 2013

காதல் மை

அனைத்தும் புதிது
இங்கே,
உன்னை நேசித்த பின்
தான் உணர்கிறேன்,
மையிட்ட விழி,
என்னையே மையம்
கொள்கிறது,
மாயம் என்னவென்றால்
அது என்னையே
பார்க்கிறது..
ஒரு வேளை நான்
தான் அழகானவனோ?
சாத்தியம் இல்லையே!!
பின் ஏன் இந்த விழி
என்னை மையம்
கொண்டது..
ஓ!! இவள் பூசிக்கொண்டு
இருப்பது காதல் மையோ?
அதான் என்னையும்
கவர்ந்து, இழுத்து
கவிழ்த்து இருக்கிறது.
-SunMuga-
28-07-2013 17.44 PM

No comments:

Post a Comment