July 6, 2013

இளவரசன்

இளவரசனாக வாழவேண்டியவன்
தன் இல்லத்து அரசியின்
மீது உள்ள காதலால்
இந்த உலகை விட்டு
பிரிந்தான்.
காகிதத்தில் உன் சடலம்
கண்டேன்..
காயமும் கொண்டேன். ..
காதலின் வலியை
நானும் கொண்டதால்...
உன் உண்மை காதல்
ஊமையாக போனது
உலகம் உன்னை பற்றி
பேசும் போது கூட..
மாயம் கொண்ட காதலில்
மாண்டு போன நீயும்
ஒரு காதலன் தான்..
உன்னில் பிறந்த
காதலால் நீ
இறந்து போவாய்
என்று யாரும்
நினைத்தது இல்லை..

No comments:

Post a Comment