July 11, 2013

நீ பாடிய பாடல்

முதல் முறை ஒரு
பாடலின் வரிகள் என்
செவிகளில் ஒழிந்து
கொண்டுள்ளன..

நானும் கண்டுபிடித்துவிட்டேன்
அது யாரோ ஒருவனால்
எழுதப்பட்டது.

அவன் எழுதும் போது
கவிதையாக இருந்த
வரிகள் இன்று
நீ பாடிய போது
கவிதை மழையாக
பொழிகிறது என்
காதுகளில்..

காதல் என்றால் உனக்கும்
தெரிந்து தான் இருக்கிறது
அது அன்பின் ஒரு
முடிவு இல்லா ஒரு
தொடக்கம் என்று.

காதலை மையமிட்ட
பாடல் தான் அது.
ஆனால் நீ பாடிய போது தான்
எனக்கே தெரிந்தது, அதில்
அன்பு மையமிட்டு
இருக்கிறது என்று..

கதாநாயகியின் கண்ணில் உள்ள
காதல் உன் பாடல்
வரியில் மின்னுகிறது,

கதாநாயகனின் காதலின்
சந்தோஷம் உன் குரலில்
தெரிகிறது.

இரண்டையும் அழகாக
பிரித்துக் கொடுக்கிறது
உன் முக பாவனை.

பாடல் தானே அது
அதை ஏன் இவ்வளவு
உயிரைக் கொடுத்து
பாடுகிறாய்?

அதை உன் உயிர்
கேட்பதாலோ!!

உண்மையான வரிகள் தான்,

எதார்த்தம் நிறைந்த
வரிகள் தான்,

ஆனால் அத்தனையும்
உயிர் பெறுகிறது
நீ பாடும் போது..

நீ பாடிய பாடல்கள் ;

சொல்லிட்டாலே அவ காதலே
சொல்லும் போதே சுகம் தாளல..
-கும்கி-

போ நீ போ போ நீ போ
தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ!!!
-3-

-Sun Muga-
11-07-2013 21.45 PM

No comments:

Post a Comment