என் உலகத்தில் இவள் தான் இரண்டாம் அழகி. இவளின் அன்பிற்கும், ஆசைக்கும் அளவே இல்லை. அடம் பிடிப்பதில் இவளை அடுச்சுகிட ஆளே இல்லை. அதிகம் பேசுவா, எப்பவும் கண் கலங்கியே தான் இருப்பா.. ஏதாவது கேட்டுக்கிட்டே, அப்பா பொம்மை வேணும்ண்னு..அதுவும் பத்து பொம்மை வேணும் அப்படின்னு..விளையாட்டுத்தனமான பேச்சு,வேடிக்கையான விளையாட்டுன்னு இவ கூட காலம் போகுது. காரணமே இல்லாம கத்துரதம், இது வேணும், அது வேணும்ன்னு, அந்த இதுவும், அதுவும் எதுனே தெரியாம... இதுவும் ஒரு சின்ன சந்தோஷம் தான். உன் கூட பழகும் போது தான் எனக்கே தெரியுது நமக்கும் குழந்தை தனம் இருக்குன்னு..
காலைலே எந்துச்சதும் நீ உன் அம்மா காலடியை சுத்தி சுத்தி வருவதும் வாடிக்கையான ஒன்று. ஆமா, என் உதிரம் தானே உனக்குள்ளும் ஓடுது. அதான் அப்படி சுத்தி சுத்தி வர...
காலைலே சாப்பிடும் போது அப்பா அது என்ன? அப்பா இது? அப்படின்னு காய்கறி பெயரை கேட்டு கேட்டு தெரிச்சுக்கும் போது உன்னை விட உன் அம்மா தான் ரெம்ப சந்தோஷப்படுவா. ..
வித விதமான ஆடை உடுத்தி அழகு பார்க்க ஆசை இல்லை. அழகாக என் மடியில் அமர வைத்து உன் அன்பின் ஆழம் பார்க்க வேண்டும். உனக்காக என் அறிவை நான் பெருக்கி கொள்ள வேண்டும்.
நடைமுறை வாழ்வில் நானும் நடந்து சென்று கொண்டே இருக்கிறேன். நாளும் உன் புன்னகையை என் கண்ணில் சுமந்தபடி.
சீருடை அணிந்தபடி, சிறு ஒடை பள்ளிக்கு செல்லும் போதுஎன் கண்ணில் ஒரு பெருநீரோடை ஒடியது அந்தமுதல் நாளில். என்னமா சொல்லி குடுத்தாங்கா அப்படின்னு கேட்டபோது,யோசிக்காம நீ ஒண்ணுமே சொல்லிக் குடுக்கலன்னு...சொல்றத கேட்கும் போது எனக்கும் சிரிப்பு தான் வருது. சரி School -ல என்ன பன்ன அப்படின்னு கேட்கும் போது,
"விளையாண்டேன்"
"கொஞ்சம் போல எழுதுனேன்"
அப்புறம்
"சாப்டேன்"
"தண்ணி குடுச்சேன்"
அப்படின்னு நீ சொல்லும் போது என்ன சொல்றதுன்னே தெரியல.. அம்மா கதை சொல்லும்மா என்று நான்கு ஐந்து முறை கதை கேட்ட பின்னும் நீ கேட்கிறது என்ன ஒரு குறும்புத்தனம். அம்மா, அப்பாக்கு கதை சொல்லாத எனக்கு மட்டும் சொல்லுன்னு நீ கேட்கிறதும், நானும் கதையை கேட்டபடியே உன்ன பார்த்தால், ஏய்!! கதை கேட்காதன்னு சொல்றேன்ல... அப்படின்னு என்ன பார்த்து மிரட்டுரதும் என் வாழ்வின் ஒரு பொக்கிஷம் .
-SunMuga-
28-07-2013 11.45 PM
காலைலே எந்துச்சதும் நீ உன் அம்மா காலடியை சுத்தி சுத்தி வருவதும் வாடிக்கையான ஒன்று. ஆமா, என் உதிரம் தானே உனக்குள்ளும் ஓடுது. அதான் அப்படி சுத்தி சுத்தி வர...
காலைலே சாப்பிடும் போது அப்பா அது என்ன? அப்பா இது? அப்படின்னு காய்கறி பெயரை கேட்டு கேட்டு தெரிச்சுக்கும் போது உன்னை விட உன் அம்மா தான் ரெம்ப சந்தோஷப்படுவா. ..
வித விதமான ஆடை உடுத்தி அழகு பார்க்க ஆசை இல்லை. அழகாக என் மடியில் அமர வைத்து உன் அன்பின் ஆழம் பார்க்க வேண்டும். உனக்காக என் அறிவை நான் பெருக்கி கொள்ள வேண்டும்.
நடைமுறை வாழ்வில் நானும் நடந்து சென்று கொண்டே இருக்கிறேன். நாளும் உன் புன்னகையை என் கண்ணில் சுமந்தபடி.
சீருடை அணிந்தபடி, சிறு ஒடை பள்ளிக்கு செல்லும் போதுஎன் கண்ணில் ஒரு பெருநீரோடை ஒடியது அந்தமுதல் நாளில். என்னமா சொல்லி குடுத்தாங்கா அப்படின்னு கேட்டபோது,யோசிக்காம நீ ஒண்ணுமே சொல்லிக் குடுக்கலன்னு...சொல்றத கேட்கும் போது எனக்கும் சிரிப்பு தான் வருது. சரி School -ல என்ன பன்ன அப்படின்னு கேட்கும் போது,
"விளையாண்டேன்"
"கொஞ்சம் போல எழுதுனேன்"
அப்புறம்
"சாப்டேன்"
"தண்ணி குடுச்சேன்"
அப்படின்னு நீ சொல்லும் போது என்ன சொல்றதுன்னே தெரியல.. அம்மா கதை சொல்லும்மா என்று நான்கு ஐந்து முறை கதை கேட்ட பின்னும் நீ கேட்கிறது என்ன ஒரு குறும்புத்தனம். அம்மா, அப்பாக்கு கதை சொல்லாத எனக்கு மட்டும் சொல்லுன்னு நீ கேட்கிறதும், நானும் கதையை கேட்டபடியே உன்ன பார்த்தால், ஏய்!! கதை கேட்காதன்னு சொல்றேன்ல... அப்படின்னு என்ன பார்த்து மிரட்டுரதும் என் வாழ்வின் ஒரு பொக்கிஷம் .
-SunMuga-
28-07-2013 11.45 PM
No comments:
Post a Comment