July 28, 2013

மானே!!

நாளும் நாம வாழ
வீடு ஒன்னு கட்டனும்,
அதுக்கு,
நாத்து ஒன்னு நட்டனும்,
பட்டணத்தில் நான்
இருந்து எட்டு நாளா
போகுது ஒரு வாரமா!!
இது என்ன நான்
வாங்கி வந்த வரமா?
ஏணி வச்சும் எட்டல,
நான்
சம்பாதிப்பதும் பத்தல,
பத்து மணின்னு
ஆரம்பிச்சு,
பதற்றத்தோடு நாள் போக,
நானும் எங்க போக..
உறவ நினைச்சு
நான் உருக,
உயிரை நினைச்சு
உறவு உருக,
நாளும் உருகுதே
என் மானே,
மாமன் நான் இருந்தும்
நனைஞ்ச தாளா
நீ இருக்க..
நானும் காத்து இருக்கேன்
நாத்தாக என் உடல் போக..
-SunMuga-
28-07-2013 18.40 PM

No comments:

Post a Comment