உன் பாதம் பார்த்து
என் கண்களின் வழியே
வணங்குகிறேன்
என் பாவம்
அதன் வழியே கரைவதற்கு!! 81
விதி நிராகரித்த போதும்
விழிகள்
உன்னை மட்டுமே
நினைப்பது
என் வாழ்வின் விதி.... 82
தனிமையில் அமர்ந்த போது
வானத்தைப் பார்த்தேன்
உன்னோடு
நம் இரு உயிர்களும்
மிளிர்ந்து கொண்டு
கண் சிமிட்டுகிறது... 83
பாரம் மிகுந்த இரவில்
நான் பயணிக்க
விரும்பும் பாதை
மரணம் மட்டுமே!! 84
சில நேர தனிமைகள்
துக்கம் நிறைந்தவை தான்
உன் நினைவால்
நான் அதை
விரட்டிய போதும்... 85
காதல் ஏற்கப்பட்ட போது
காலம் மறுக்கப்படுகிறது
காலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது
காதலின் உணர்வுகள்
மறுக்கப்படுகிறது
காலமும் காதலும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட போது
வாழ்க்கை மாறியிருக்கிறது.. 86
உணர்வுகளை கடந்து
உயிர்கள் ஏனோ
உன்னை அடைய முற்படுகிறது
முடியாது என்ற தெரிந்த போது
உயிரோ உணர்வின் வழி
கண்ணீரை வெளிப்படுத்துகிறது.... 87
ஒன்றுமே இல்லாத போதும்
வாழ்க்கை
இப்படியே நகர்கிறது
வெறுமையை சுமந்து கொண்டு.. 88
வேதனை களைவதற்கு
வேண்டும்
ஒரு தேவதை!! 89
அன்பு நம்பப்படுமானால்
காதல்
எத்தனை காலம் ஆனாலும்
இருந்துகொண்டு தான் இருக்கும்... 90
No comments:
Post a Comment