நட்சத்திரம் அற்ற
வானத்தை பார்க்கும் போது
வெறுமை ஏற்படுகிறது
உன் முத்தத்தின்
எண்ணிக்கையை இழந்த
ஒரு நினைவால்.... 91
உன் பிரிவின் வழி
காலம் ஒவ்வொன்றாக
சொல்லித் தருகிறது
ஏனோ
கண்ணீரையும் தருகிறது... 92
கண்ணீர் என்பது
கண்களில் சுரப்பது இல்லை
காணாமல் தவிக்கும்
இதயத்தில்.... 93
வாழ்வின் மிகச்சிறந்த
நொடி எதுவென்றால்
உன் கண்களை மட்டுமே
பார்த்த
முதல் நொடி என்பேன்... 94
உன் குரலை
கேட்ட பின்பு தான்
நான் இந்த உலகத்தில்
உயிர் வாழ்கிறேன்
என்று நம்புகிறது
என் கனவுகளும், கவலைகளும்.. 95
காதலை விட
காதலியை பிரிந்து
வாழ்வது தான்
கடினமாய் இருக்கிறது
கவிதையில் கூட... 96
விழி தேடும்
வழியெங்கும்
உன் விழியின் பாதம்
தேடுகிறது
என் கவிதைகள்! 97
வாழ்வில் அத்தனை
கவனமாய் இருந்த போதும்
காதல் சில தவறுகள்
செய்து விடுகிறது
உன்னை என்னிடமிருந்து
பிரித்துவிட்டதை போல... 98
நீ பேசும்
வார்த்தைகளை கவிதையாக்கி
அதை காதலும்-ஆக்கி
உன் விழிகளுக்கு
மட்டுமே விருந்து அளிப்பேன்.. 99
உன் விழியால்
என் புலமையை வளர்த்தேன்
அதில் கவிதையாய்
உன் இளமை
காதலை வளர்த்தேன்... 100
No comments:
Post a Comment