மெளனம் நிறைந்த
இரவில்
நான் மெளனமாக
அழுது கொண்டு இருக்கிறேன்
எனது அழுகையின் ஒலி
என்னைத் தவிர
வேறு யாருக்கும்
கேட்காதபடி,
ஏன் என்றால்
எனது உலகம்
உன்னால் உருவாக்கப்பட்ட
ஒன்று
உன்னைத் தவிர
நானும்
எனது கனவுகளும்
எனது கவிதைகளுமே
வாழும் உலகம்..
உறங்க மறுத்த விழிகள்
உலகை வெறுக்க
வேண்டிய ஒரு அவசியமும்
இல்லாத போது
விழி இனி
உன்னோடு
விழித்த நிலையிலே
கனவு காணட்டும்,
No comments:
Post a Comment