இறப்பு என்பது
நிரந்தரம் என்ற போது
இருப்பின் நிலையை
கடந்து
இயல்பாக இருக்க
முற்படுகிறது
எனது இளமைக் காலம்,
இறப்பு என்பது
நிரந்தரம் என்ற போது
இருப்பின் நிலையை
கடந்து
நான் இவ்வுலகில்
இல்லாமல் இருக்க
முற்படுகிறது
எனது முதுமைக் காலம்,
இறப்பு என்பது
இயல்பானது என்ற போதும்
அது
இல்லாமல் இருக்க
எப்பொழுதும்
முற்படுகிறது
எனது குழந்தையின் எதிர்காலம்.....
-SunMuga-
15-04-2016 21:36 PM
No comments:
Post a Comment