July 7, 2016

உள்ளம்

உறவுகள் உறங்கும்
இரவில்
உள்ளமும்
உன் விழிகளும்
என்னை
விழிக்கச் செய்கிறது
விடை தெரியாத
வாழ்க்கையை நினைத்து..

விடுமுறை இல்லாத
உன் நினைவும்
விழிகளில் ஏனோ
வழியச் செய்கிறது
ஏதோவொரு
கண்ணீர் துளியை. .

No comments:

Post a Comment