May 29, 2015

2015 கவிதைகள் 841 to 850

இருளின் இன்பம்
அறிந்து இணைவோம்
நாம் இணைந்து
இரவை இன்பமாக்குவோம்... 841

இன்னும் ஓர்
இருள் சூழ
உன் கண்களை மூடிக் கொள்
இருளாக நானே
சூழ்வேன் உன்னையே...  842

இணையும் இதழில்
இதம் சேரும்
இன்னும் இன்னும்
இதம் தர இருளும்
ஒன்று சேரும்.....      843

நீ உடுத்திய புடவையில்
பூவாக நானே
இருப்பேன் உன் உடலின்
வாசனையை உனக்கு
கூட்டி....         844

நீ தரும் சுகம் தான்
என் அந்நாள்
சுமையை குறைக்கிறது... 845

தீரும் இரவில்
தீராத உன் முத்தம்
மீண்டும் மீண்டும்
தீண்ட வைக்கிறது
இன்னொரு இரவை...   846

உன் காதல் உலகத்தில் 
நான் எட்டிப் பார்த்தால் 
என் முகம் மட்டுமே தெரிகிறது..  847

காலம் தரும் கவலையில் 
காதல் மட்டுமல்ல 
நம் காதல் மட்டுமே 
கலந்து இருக்கிறது..    848

எதிர்பார்த்த படி
என்னில் நீ முத்தம் பதித்தாய் 
பாதி உறக்கத்தின் நடுவே 
உன் கண்ணை நான்
ரசித்த பின்பு....   849

உன் முத்தம் 
ஒன்றே போதும் 
இருள் மட்டுமே ரசிக்கும் 
நிலவை நானும் ரசிக்க...  850

No comments:

Post a Comment